உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுவாணி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26: வரிசை 26:
ஆனால், அந்த எண்ணமே திட்டத்துக்கு மீண்டும் உத்வேகமூட்டியது. மீண்டும் பணிகள் தொடங்கின. மக்களும் சேர்ந்து உழைத்தார்கள். 1929-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ல் கோயம்புத்தூரின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அன்றுதான் முதல்முறையாக நகரத்துக்கு சிறுவாணி குடிநீர் வந்தது.இன்றைக்கு கோயம்புத்தூர் மக்கள் குடிக்கும் சிறுவாணியின் ஒவ்வொரு சொட்டுத் தண்ணீருக்கும் பின்னால் இவ்வளவு போராட்டங்கள் இருந்திருக்கிறது.சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் பெயரில் கோவையில் இரத்தினசபாபதிபுரம்(R.S.Puram) உள்ளது.
ஆனால், அந்த எண்ணமே திட்டத்துக்கு மீண்டும் உத்வேகமூட்டியது. மீண்டும் பணிகள் தொடங்கின. மக்களும் சேர்ந்து உழைத்தார்கள். 1929-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ல் கோயம்புத்தூரின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அன்றுதான் முதல்முறையாக நகரத்துக்கு சிறுவாணி குடிநீர் வந்தது.இன்றைக்கு கோயம்புத்தூர் மக்கள் குடிக்கும் சிறுவாணியின் ஒவ்வொரு சொட்டுத் தண்ணீருக்கும் பின்னால் இவ்வளவு போராட்டங்கள் இருந்திருக்கிறது.சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் பெயரில் கோவையில் இரத்தினசபாபதிபுரம்(R.S.Puram) உள்ளது.


1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்கு பின் 1956 ஆம் வருஷம் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அதுவரை ஒருங்கிணைந்த சென்னை மாகாணமா இருந்த பகுதி, தமிழகம் கேரளம் ஆந்திரம் கருநாடகம் என பிரிந்ததில், சிறுவாணி ஆறு முழுமையாக கேரளத்திடம் சேர்ந்துவிட்டது.கோவை நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்ற [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயர்களால்]] கட்டப்பட்ட சிறு நீர்த்தேக்கம், வளர்ந்து வந்த நகரின் தேவைகளை ஈடுகட்ட முடியாத நிலையில், 1969ஆம் ஆண்டு முதல் [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசும்]] [[கேரள அரசு]]ம் ஆய்வுகள் நடத்தி ,1973 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரா இருந்த கலைஞர் அவர்கள் அதிக அளவு சிறுவாணி நீரை கோவைக்கு கொண்டுவரவேண்டும் என முயற்சி செய்து அப்போதைய கேரள முதல்வருடன் பேசி சிறுவாணியில் புதிதாக ஒரு அணை கட்டுவது எனவும் அதன் மூலம் நீரை கோவைக்கு கொண்டு வருவது எனவும் முடிவானது. ஆகத்து 19,1973 அன்று ஓர் புதிய அணையைக் கட்ட உடன்பாடு கண்டனர்.இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், சட்டப்படியும் புவியியல் படியும் சிறுவாணி நதி முழுக்க முழுக்க கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் அப்போதைய தமிழக கேரள அரசின் சுமூகமான உறவின் அடிப்படையில் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர சம்மதித்ததோடு, அதற்கு வசதியாக சிறுவாணியில் புதியதாக ஒரு அணையையும் கட்டி நீர் தேக்கி அதன் மூலம் கோவைக்கு தண்ணீர் வசதி கொடுத்தார்கள்.திமுக அரசின் இந்த முயற்சிக்கு அதன் பின்னர் வந்த எம்.ஜி.ஆர் அவர்களின் அரசும் தொடர்ந்து ஆதரவு அளித்து 1984 ஆம் ஆண்டு சிறுவாணி அணை திறக்கப்பட்டது. பழைய அணைக்குக் கீழே 2.2 கி.மீட்டர் தொலைவில் மூத்திகுளம் அருவியின் நீர், கோபி ஆறு, அணசோலை ஆறு மற்றும் பட்டி ஆறு ஆகியவற்றின் நீர்களைத் தேக்கும் விதத்தில் 1984 – ஆம் ஆண்டு புதிய சிறுவாணி அணை கட்டப்பட்டது. இவ்விரு அணைகளிலிருந்தும் பல மில்லியன் காலன் குடிநீர் கோவை மாநகருக்கு விநியோகம் செய்யப்பட்டுகிறது. கேரள அரசு இன்றைய [[சிறுவாணி_அணை|சிறுவாணி அணையைக்]] கட்டி அதற்கான கேரள மாநில நிலத்தை தமிழகத்திடம் பராமரிப்பிற்கு ஒப்படைத்தது<ref>[http://books.google.co.in/books?id=hhrRboi5kOcC&pg=PA141&lpg=PA141&dq=siruvani+river&source=bl&ots=c7oWQ2qXj7&sig=-G3GQ8jBYZM9em9wGu0v5PzFVts&hl=en&ei=avHfSvjOKMeXkAXZiLgg&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CBIQ6AEwBA#v=onepage&q=siruvani%20river&f=false River disputes in India: Kerala rivers under siege S. N. Sadasivan - 2003 - Business & Economics - 238 pages]</ref>. இந்த அணையை கட்டியது கேரள பொதுப்பணி துறை. அணையை நிர்வகித்து வருவதும் அவர்களே. கேரளாவில் உற்பத்தியாகி,கேரளாவிலேயே ஓடி, கேரளாவில் முடியும் சிறுவாணி நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர் கொடுக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக தான் இந்த அணை கட்டப்பட்டது. இது மிகவும் முக்கியமானது. இந்த அணையின் இருபுறமுள்ள வாயில்களும் முறையே தமிழக மற்றும் கேரள கட்டிட வடிவமைப்பைக் கொண்டு அழகாக விளங்குகின்றன. அணையும் முத்திக்குளம் அருவியும் கோவை, பாலக்காடு நகர மக்களின் விடுமுறை பயண இடமாக விளங்குகிறது.
1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்கு பின் 1956 ஆம் வருஷம் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அதுவரை ஒருங்கிணைந்த சென்னை மாகாணமா இருந்த பகுதி, தமிழகம் கேரளம் ஆந்திரம் கருநாடகம் என பிரிந்ததில், சிறுவாணி ஆறு முழுமையாக கேரளத்திடம் சேர்ந்துவிட்டது.கோவை நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்ற [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயர்களால்]] கட்டப்பட்ட சிறு நீர்த்தேக்கம், வளர்ந்து வந்த நகரின் தேவைகளை ஈடுகட்ட முடியாத நிலையில், 1969ஆம் ஆண்டு முதல் [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசும்]] [[கேரள அரசு]]ம் ஆய்வுகள் நடத்தி ,1973 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரா இருந்த கலைஞர் அவர்கள் அதிக அளவு சிறுவாணி நீரை கோவைக்கு கொண்டுவரவேண்டும் என முயற்சி செய்து அப்போதைய கேரள முதல்வருடன் பேசி சிறுவாணியில் புதிதாக ஒரு அணை கட்டுவது எனவும் அதன் மூலம் நீரை கோவைக்கு கொண்டு வருவது எனவும் முடிவானது. ஆகத்து 19,1973 அன்று ஓர் புதிய அணையைக் கட்ட உடன்பாடு கண்டனர்.இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், சட்டப்படியும் புவியியல் படியும் சிறுவாணி நதி முழுக்க முழுக்க கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் அப்போதைய தமிழக கேரள அரசின் சுமூகமான உறவின் அடிப்படையில் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர சம்மதித்ததோடு, அதற்கு வசதியாக சிறுவாணியில் புதியதாக ஒரு அணையையும் கட்டி நீர் தேக்கி அதன் மூலம் கோவைக்கு தண்ணீர் வசதி கொடுத்தார்கள்.திமுக அரசின் இந்த முயற்சிக்கு அதன் பின்னர் வந்த எம்.ஜி.ஆர் அவர்களின் அரசும் தொடர்ந்து ஆதரவு அளித்து 1984 ஆம் ஆண்டு சிறுவாணி அணை திறக்கப்பட்டது. பழைய அணைக்குக் கீழே 2.2 கி.மீட்டர் தொலைவில் மூத்திகுளம் அருவியின் நீர், கோபி ஆறு, அணசோலை ஆறு மற்றும் பட்டி ஆறு ஆகியவற்றின் நீர்களைத் தேக்கும் விதத்தில் 1984 – ஆம் ஆண்டு புதிய சிறுவாணி அணை கட்டப்பட்டது. இவ்விரு அணைகளிலிருந்தும் பல மில்லியன் காலன் குடிநீர் கோவை மாநகருக்கு விநியோகம் செய்யப்பட்டுகிறது. கேரள அரசு இன்றைய [[சிறுவாணி_அணை|சிறுவாணி அணையைக்]] கட்டி அதற்கான கேரள மாநில நிலத்தை தமிழகத்திடம் பராமரிப்பிற்கு ஒப்படைத்தது<ref>[http://books.google.co.in/books?id=hhrRboi5kOcC&pg=PA141&lpg=PA141&dq=siruvani+river&source=bl&ots=c7oWQ2qXj7&sig=-G3GQ8jBYZM9em9wGu0v5PzFVts&hl=en&ei=avHfSvjOKMeXkAXZiLgg&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CBIQ6AEwBA#v=onepage&q=siruvani%20river&f=false River disputes in India: Kerala rivers under siege S. N. Sadasivan - 2003 - Business & Economics - 238 pages]</ref>. இந்த அணையை கட்டியது கேரள பொதுப்பணி துறை. அணையை நிர்வகித்து வருவதும் அவர்களே. கேரளாவில் உற்பத்தியாகி,கேரளாவிலேயே ஓடி, கேரளாவில் முடியும் சிறுவாணி ஆற்றிலிருந்து தமிழகத்துக்கு நீர் கொடுக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக தான் இந்த அணை கட்டப்பட்டது. இது மிகவும் முக்கியமானது. இந்த அணையின் இருபுறமுள்ள வாயில்களும் முறையே தமிழக மற்றும் கேரள கட்டிட வடிவமைப்பைக் கொண்டு அழகாக விளங்குகின்றன. அணையும் முத்திக்குளம் அருவியும் கோவை, பாலக்காடு நகர மக்களின் விடுமுறை பயண இடமாக விளங்குகிறது.


== சிறுவாணி அருவி அல்லது கோவைக் குற்றால அருவி ==
== சிறுவாணி அருவி அல்லது கோவைக் குற்றால அருவி ==

03:43, 3 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

சிறுவாணி நதி

சிறுவாணிஆறு கோயம்புத்தூர் நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்றும், உலகில் மிகச் சுவையான தூய்மையான குடிநீர் மூலங்களில் ஒன்றாகும். தமிழகத்தின் நொய்யல் ஆறு உற்பத்தியாகும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், மேற்குச் சரிவில் கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு தாலுகா பகுதியில் முத்திக்களம் அருவியிலிருந்து இவ்வாறு உருவாகிறது. முத்திக்குளம் அருவியுடன் பாம்பாறு,பட்டியாறு, மேலும் பல ஓடைகள் இணைந்து சிறுவாணிஆறாக உருவெடுக்கிறது. இது பவானி ஆற்றின் துணை ஆறு ஆகும். அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள தமிழக எல்லையில் பவானியுடன் இணைகிறது சிறுவாணி. சிறுவாணி தமிழகத்தில் உள்ளதாகவும்,நொய்யல் ஆற்றில் இணைவதாக சில மக்களால் அறியாமையில் கருதப்படுகிறது.

சிறுவாணி அணை

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டம் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதி. மெட்ராஸ் மாகாண பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் 1927-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், “இந்த மெட்ராஸ் மாகாணத்தின் தண்ணீரில் மிக மோசமான தண்ணீர் எதுவென்றால், அது கோயம்புத்தூரின் தண்ணீர்தான். இந்த மோசமான தண்ணீரால் மக்களுக்கு பொருள் இழப்பும், உடல் நல பாதிப்பும் ஏற்படுகிறது.மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் கோயம்புத்தூர் நகராட்சி தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத் தப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

நொய்யல் ஆறு நகரத்துக்கு அருகில் ஓடினாலும் அதை குடிநீராக கொண்டுவரும் திட்டம் எதுவும் அன்று இல்லை. தவிர, அந்த நொய்யலில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவில்லை. நகரத்துக்குள் இருந்த சில உப்புத் தண்ணீர் கிணறுகள் மட்டுமே மக்களின் நீர் ஆதாரமாக விளங்கின. தண்ணீர் தேவை குறித்து மக்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறை யிட்டார்கள். அன்று தொடங்கியது குடிநீருக்கான போராட்டம்.

1889-ம் ஆண்டில் சிறுவாணி மலைப் பகுதியில் உள்ள முத்திக் குளம் அருவி நீரை கொண்டு வரலாம் என்றார் எஸ்.பி.நரசிம்மலு நாயுடு என்கிற பத்திரிகையாளர் அவர் நில உடமையாளரும்கூட. வெள்ளியங்கிரி மலைக்கோவிலுக்கு செல்லும் அவர் அங்கிருந்து பார்த்தால் தெரியும், நீர் கொட்டும் முத்திக்குளம் அருவியைக் கண்டு வியந்து , அதன் தண்ணீரை கோவைக்கு கொண்டுவர எண்ணி வருடம் முழவதும் நீர் வருகிறதா என அறிய பலமுறை வெள்ளியங்கிரி சென்று வந்திருந்தார். அப்போது பாலக்காடு மெட்ராஸ் மாகாணப் பகுதியாக இருந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர், ‘அங்கெல்லாம் மனிதர்கள் செல்வது சிரமம். நீங்கள் ஆய்வு செய்து வந்தால் அரசாங்கம் பரிசீலிக்கும்’ என்றார் அலட்சியமாக. ஏனென்றால் அவ்வளவு அடர்ந்த வனம் அது. பலர் தடுத்தும் கேட்காமல் நரசிம்மலு நாயுடு தனது நண்பர்களுடன் கிளம்பிவிட்டார். மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரம் மலை ஏறிச் செல்ல வேண்டும்.யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் ஏராளமாக இருந்தன. பல நாட்கள் பல இடையூறுகளைத் தாண்டி முத்திக்குளம் அருவியை அடைந்தார் அவர்.

அங்கு மிகுந்த அளவில் நீர் இருந்தது. ஆய்வு நடத்தி, ஊர் திரும்பியவர், மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து அந்த அருவி நீரை நொய்யலுக்கு திருப்பினால் கோயம்புத்தூரின் தண்ணீர் பிரச்சினை தீரும் என்று அறிக்கை சமர்ப்பித்தார். கோவைக்கு மேற்கே 21 மைலில் பொரத்தி அடிவாரத்திற்கு சென்று, அம்மலை மீது ஏறி, மறுபக்கம் இறங்கினால், சிறுவாணியை அடையலாம். அந்த மலையை குடைந்து நீண்ட துவாரம் ஆக்கி, அதன் வழியாய் வரும் சிறுவாணிக்கு, ஓர் அணையை கட்டி வைத்து, தேக்கிய நீரை ஓடவிட்டால், அந்த நீர் மலையின் கிழக்குச் சரிவில் ஓடுகிற ஆனையாற்றில் வந்து விழும். அவ்வாறு வரும் நீரைத் தொட்டிகளில் நிரப்பி, குழாய் வழியாக 21 மைல் தொலைவிலுள்ள கோவை நகரத்திற்கு கொண்டு வரச் செய்தலே இத் திட்டம் ஆகும்.முல்லைப்பெரியாறு திட்டத்தின் ஈர்ப்பில் இத்திட்டம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுவதுண்டு.

ஆனால், நிதி ஆதாரம் இல்லை என்று மறுத்தது அரசு. மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் 1892-ம் ஆண்டு ஒரு பொறியாளரை அரசு நியமித்தது. அவர் சிறுவாணி திட்டம் சாத்தியமில்லை என்று சொல்லி, நொய்யல் நீரை பயன்படுத்த திட்டம் தீட்டினார். வெள்ளலூர் அணைக்கட்டில் ஓரளவு நீர் இருப்பதால், அங்கிருந்து தண்ணீர் கொண்டு வர திட்டம் தந்தார்.அதற்கும் நிதி இல்லை என்று அரசு கைவிரித்தது. நொய்யலை மையமாக வைத்தே பல திட்டங்கள் தீட்டப்பட்டு, கழிக்கப்பட்டன.

இதற்கிடையில் கோயம்புத் தூரில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. பத்தாண்டுகள் ஓடிய நிலையில் சிறுவாணி திட்டம் மீண்டும் எடுக்கப்பட்டது. இதற்கு காரணம் அப்போது இந்தியா முழுவதும் மின் உற்பத்திக்கான ஆய்வுகள் நடந்து வந்தன. சிறுவாணியிலும் ஆய்வு செய்தார்கள். திட்டம் வெற்றி பெற்றால் மின் உற்பத்தி மூலம் திட்டச் செலவை ஈடுகட்டிவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் தென்னிந்திய ரயில்வே நிறுவனம் (அப்போது அது தனியார் நிறுவனம்) சிறுவாணி நீர் மின் திட்டத்துக்கு உதவ முன்வந்தது. ஏனெனில் கோயம்புத்தூரில் தனது தொழிற் சாலை அமைக்கும் எண்ணம் அந்நிறுவனத்துக்கு இருந்தது. ஆனால் ஆய்வில் சிறுவாணியின் மழைப்பொழிவு குறித்து கேள்வி எழுந்தது. மீண்டும் திட்டம் கைவிடப்பட்டது.அந்நிறுவனம் நீலகிரியில் குந்தா,பைகாரா நீர்மின் திட்டற்களில் ஆர்வம் காட்டி அத்திட்டங்களை மேற்கொண்டது.

1921-ம் ஆண்டு சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் என்பவர் நகராட்சித் தலைவரானார். அவர் ஏற்கெனவே சிறுவாணி ஆய்வு களில் பங்கு பெற்றவர். இந்த முறை அவரது இடைவிடாத முயற்சியால் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தது. 1924-ம் ஆண்டு சிறுவாணி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் தொடங்கின.அதன்படி, மலையில் ஒரு மைல் நீளம் உள்ள துவாரம் தோண்டப்பட்டது. அப்போது 23 அடி உயரமமுடைய அணை கட்டப்பட்டது . 18 அங்குலம் குறுக்களவு கொண்ட குழாய் பதிக்கப்பட்டு கோவை நகருக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டது.

சாலை, மின்சாரம், தொழில் நுட்பம் எதுவும் இல்லாத சூழலில் நகராட்சியின் நிதிப் பற்றாக் குறையால் அவ்வப்போது திட்டம் திணறியது. யானைகள், புலிகள், அட்டைக்கடி, மலேரியா என தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள். கூடவே, திட்டத்துக்கு எதிராக வழக்குகளும் போடப்பட்டன.

மூன்று ஆண்டுகளில் மலை மேலிருந்து குகைப் பாதை மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணிகள் முடிந்தன. அப்போதுதான் அந்த விபரீதம் ஏற்பட்டது. 1927-ம் ஆண்டு கடுமையான மழை. கூடவே பெரும் நிலச்சரிவு. கட்டுமானங்கள், கருவிகள் எல்லாம் மண் மூடிப்போயின. 40 ஆண்டு கால போராட்டம் வீணாகிப்போனதே என்ற மக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

ஆனால், அந்த எண்ணமே திட்டத்துக்கு மீண்டும் உத்வேகமூட்டியது. மீண்டும் பணிகள் தொடங்கின. மக்களும் சேர்ந்து உழைத்தார்கள். 1929-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ல் கோயம்புத்தூரின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அன்றுதான் முதல்முறையாக நகரத்துக்கு சிறுவாணி குடிநீர் வந்தது.இன்றைக்கு கோயம்புத்தூர் மக்கள் குடிக்கும் சிறுவாணியின் ஒவ்வொரு சொட்டுத் தண்ணீருக்கும் பின்னால் இவ்வளவு போராட்டங்கள் இருந்திருக்கிறது.சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் பெயரில் கோவையில் இரத்தினசபாபதிபுரம்(R.S.Puram) உள்ளது.

1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்கு பின் 1956 ஆம் வருஷம் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அதுவரை ஒருங்கிணைந்த சென்னை மாகாணமா இருந்த பகுதி, தமிழகம் கேரளம் ஆந்திரம் கருநாடகம் என பிரிந்ததில், சிறுவாணி ஆறு முழுமையாக கேரளத்திடம் சேர்ந்துவிட்டது.கோவை நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்ற ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சிறு நீர்த்தேக்கம், வளர்ந்து வந்த நகரின் தேவைகளை ஈடுகட்ட முடியாத நிலையில், 1969ஆம் ஆண்டு முதல் தமிழக அரசும் கேரள அரசும் ஆய்வுகள் நடத்தி ,1973 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரா இருந்த கலைஞர் அவர்கள் அதிக அளவு சிறுவாணி நீரை கோவைக்கு கொண்டுவரவேண்டும் என முயற்சி செய்து அப்போதைய கேரள முதல்வருடன் பேசி சிறுவாணியில் புதிதாக ஒரு அணை கட்டுவது எனவும் அதன் மூலம் நீரை கோவைக்கு கொண்டு வருவது எனவும் முடிவானது. ஆகத்து 19,1973 அன்று ஓர் புதிய அணையைக் கட்ட உடன்பாடு கண்டனர்.இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், சட்டப்படியும் புவியியல் படியும் சிறுவாணி நதி முழுக்க முழுக்க கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் அப்போதைய தமிழக கேரள அரசின் சுமூகமான உறவின் அடிப்படையில் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர சம்மதித்ததோடு, அதற்கு வசதியாக சிறுவாணியில் புதியதாக ஒரு அணையையும் கட்டி நீர் தேக்கி அதன் மூலம் கோவைக்கு தண்ணீர் வசதி கொடுத்தார்கள்.திமுக அரசின் இந்த முயற்சிக்கு அதன் பின்னர் வந்த எம்.ஜி.ஆர் அவர்களின் அரசும் தொடர்ந்து ஆதரவு அளித்து 1984 ஆம் ஆண்டு சிறுவாணி அணை திறக்கப்பட்டது. பழைய அணைக்குக் கீழே 2.2 கி.மீட்டர் தொலைவில் மூத்திகுளம் அருவியின் நீர், கோபி ஆறு, அணசோலை ஆறு மற்றும் பட்டி ஆறு ஆகியவற்றின் நீர்களைத் தேக்கும் விதத்தில் 1984 – ஆம் ஆண்டு புதிய சிறுவாணி அணை கட்டப்பட்டது. இவ்விரு அணைகளிலிருந்தும் பல மில்லியன் காலன் குடிநீர் கோவை மாநகருக்கு விநியோகம் செய்யப்பட்டுகிறது. கேரள அரசு இன்றைய சிறுவாணி அணையைக் கட்டி அதற்கான கேரள மாநில நிலத்தை தமிழகத்திடம் பராமரிப்பிற்கு ஒப்படைத்தது[1]. இந்த அணையை கட்டியது கேரள பொதுப்பணி துறை. அணையை நிர்வகித்து வருவதும் அவர்களே. கேரளாவில் உற்பத்தியாகி,கேரளாவிலேயே ஓடி, கேரளாவில் முடியும் சிறுவாணி ஆற்றிலிருந்து தமிழகத்துக்கு நீர் கொடுக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக தான் இந்த அணை கட்டப்பட்டது. இது மிகவும் முக்கியமானது. இந்த அணையின் இருபுறமுள்ள வாயில்களும் முறையே தமிழக மற்றும் கேரள கட்டிட வடிவமைப்பைக் கொண்டு அழகாக விளங்குகின்றன. அணையும் முத்திக்குளம் அருவியும் கோவை, பாலக்காடு நகர மக்களின் விடுமுறை பயண இடமாக விளங்குகிறது.

சிறுவாணி அருவி அல்லது கோவைக் குற்றால அருவி

சிறுவாணி மலைகளிலிருந்து உருவாகும் பெரியாறு, தமிழகத்தின் மேற்கு மலைத்தொடர்களின் கிழக்குச்சரிவில் பாய்ந்து மேலும் பல சிற்றாறுகளுடன் இணைந்து நொய்யல் ஆறாக உருவெடுக்கிறது. இவ்வாற்றில் சிறுவாணி அருவி எனவும் அழைக்கப்பட்ட கோவைக் குற்றால அருவி அமைந்துள்ளது . கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் அடர்ந்த கானகத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு இங்கு செல்ல அனுமதி கிடையாது.

சிறுவாணியும் நொய்யலும்

உலகில் இரண்டாவது சுவையான குடிநீர் என சிறுவாணி நீர் புகழப்பட்டாலும் அது இன்றைய கேரளத்தில் உள்ளது.அதே பகுதியில் உருவாகி தமிழகத்தில் ஓடும் நொய்யலை சுற்றுச் சூழல் விழிப்புணர்வின்றி சாக்கடை,இரசாயனக் கழிவுகளைக் கலந்து மாசுபடச் செய்து பயனற்ற செத்த ஆறாக மாற்றியுள்ளனர் தமிழர்கள்..நொய்யலுக்கு நீர் வரும் வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.இந்நிலை வருந்தத்தககது. நொய்யலை மீட்க சுற்றுச் சூழல் அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் முயன்று வருகின்றன.அதற்கு அரசும் மக்களும் ஆதரவு அளித்திட வேண்டும்.

மேற்கோள்கள்

  1. River disputes in India: Kerala rivers under siege S. N. Sadasivan - 2003 - Business & Economics - 238 pages

2.http://www.mycoimbatore.com/siruvani-water-coimbatore-history-of-siruvani-river-in-tamil/

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுவாணி_ஆறு&oldid=2548728" இலிருந்து மீள்விக்கப்பட்டது