Ottrai Roja
5/5
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsUdal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsOru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Kalyana Raagam Rating: 5 out of 5 stars5/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsSippikkul Muthu Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Savithriyin Kathapaathiram Rating: 4 out of 5 stars4/5Vetti Vergal Rating: 5 out of 5 stars5/5Penn Vannam Kandean Rating: 0 out of 5 stars0 ratingsAndroru Naal Rating: 3 out of 5 stars3/5Anbukku Panjamillai Rating: 5 out of 5 stars5/5Nadhiyai Thedi Vandha Kadal Rating: 5 out of 5 stars5/5Chinnanchiru Kiliye! Rating: 5 out of 5 stars5/5Santhana Malargal Rating: 5 out of 5 stars5/5Oru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsMann Bommai Rating: 5 out of 5 stars5/5Kadhalai Vittu Vidu...! Rating: 5 out of 5 stars5/5Paarkadal Rating: 5 out of 5 stars5/5Suriyagrahanam Rating: 5 out of 5 stars5/5Shyamala... Rating: 5 out of 5 stars5/5Thanthai Sol Mikkathor Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ottrai Roja
Related ebooks
Sollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Manushigal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsUnnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsEn Veedu Rating: 0 out of 5 stars0 ratingsThunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Oru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Neerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsVizhigal Ezhuthiya Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsKundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Varuvaan Nayagan! Rating: 0 out of 5 stars0 ratingsSamsaram Enbathu Veenai! Rating: 0 out of 5 stars0 ratingsUravin Kural Rating: 0 out of 5 stars0 ratingsSamsaarap Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsOru Thirumanam Nichayikkapadugirathu Rating: 0 out of 5 stars0 ratingsPonnai Virumbum Boomiyile... Rating: 5 out of 5 stars5/5Innoru Vanavasam Rating: 0 out of 5 stars0 ratingsAlamarathu Kiligal Rating: 0 out of 5 stars0 ratingsPasumai Niraintha Ninaivugal Rating: 5 out of 5 stars5/5Soorya Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsRanjani Rating: 0 out of 5 stars0 ratingsMalai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5Azhage Unnai Aaraathikkiren Rating: 4 out of 5 stars4/5Thalatta Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsEnna Vilai Azhage…? Rating: 5 out of 5 stars5/5Kannil Theriyum Vannapparavai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ottrai Roja
1 rating0 reviews
Book preview
Ottrai Roja - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
ஒற்றை ரோஜா
Ottrai Roja
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
1
எப்படியிருக்கு வீடு?
பரத் தன் வருங்கால மனைவியை நோக்கி கண்கள் மின்ன கேட்டான்.
நல்லா தான் இருக்கு... ஆனா...
என்ன சொல்லு!
இப்போதைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் இந்த வீடு போதும். ஆனா வீட்டுக்கு நாலு பேர் வந்தா ரொம்ப கஷ்டமா இருக்காது?
எங்க வீட்டைத்தானே சொல்றே? எங்க வீட்லேர்ந்து அடிக்கடி யார் வரப் போறாங்க? மிஞ்சிப்போனா அம்மா வருவாங்க. அவங்க ரொம்ப அட்ஜஸ்ட்மென்ட். கிச்சன்ல கூட சுருண்டு படுத்துக்கற டைப். யாரையும், எதுக்கும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. ஒரு வாரம் அல்லது பத்து நாள் இருந்துட்டு போய்டுவாங்க. அக்காவால அவ பெரிய குடும்பத்தை விட்டுட்டு வர முடியாது. தம்பி இப்பத்தான் வேலையில சேர்ந்திருக்கான். அவனும் வரமாட்டான். தவிர நாமதான் வருஷத்துக்கொரு தரம் ஊருக்குப் போய்டப் போறோமே. எல்லாரையும் ஒரே நேரத்துல பார்த்துடப் போறோம். அப்புறம் என்ன?
நா உங்க வீட்டைப் பத்தி பேசலை.
பின்ன?
எங்க வீட்லேர்ந்து யாராவது வந்தா எங்க தங்குவாங்க? அவங்களுக்கெல்லாம் கிச்சன்ல சுருண்டு படுத்து பழக்கமில்லையே...
பவானி கேட்க, முதன்முறையாக பரத் முகம் சுருங்கினான். ஒரு வினாடிதான் பிறகு சிரிப்போடு அவளைப் பார்த்தான்.
அவங்களுக்கு பெட்ரூமைக் கொடுத்துட்டு நாம வெளில வந்துடுவோம். நாம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கற இடம் நமக்கு சொர்க்கம்தானே!
பவானி எதுவும் சொல்லாவிட்டாலும் இரட்டை படுக்கையறை கொண்ட வீடாக அவன் பார்த்திருக்கலாம் என்ற ஆதங்கம் அவள் முகத்தில் தெரிந்தது.
என்னாச்சு... இன்னும் பெரிசா வீடு எடுத்திருக்கலாம்னு தோணுதா?
பரத் அவள் தோளில் கை வைத்துக் கேட்க, அவள் அசட்டு சிரிப்போடு அவனைப் பார்த்தாள்
என்ன செய்ய? இதுக்கே வாடகை எவ்ளோ தெரியுமில்ல? ரெண்டாயிரத்தி இருநூற்றுக்கு ஒரு பைசா குறைக்க மாட்டேன்னுட்டார் வீட்டுக்காரர். தவிர மெயின் டென்ஸுக்கு இருநூறு ரூபாயாம். அப்புறம் கரண்ட் பில், டெலிபோன் பில்லுன்னு எல்லா செலவையும் சமாளிக்கணும் இல்லையா? என்ன தான் ரெண்டு பேரும் சம்பாதிக்கறோம்னா கூட இப்போதைய விலைவாசி விழி பிதுங்க வைக்குமே...
விலைவாசி பற்றி அவன் பேசியதும் அவள் முகம் மாறியது. அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. பரத்தும், அவளும் ஒரே பில்டிங்கில் வெவ்வேறு அலுவலங்களில் பணிபுரிந்து வந்தாலும் ஒருவரை ஒருவருக்கு பழக்கமில்லை. தரகர் மூலம் ஜாதகம் வந்தபோதுதான், அட நம்ம பில்டிங்கில்தான் இருக்கிறானா என்ற வியப்பேற்பட்டது. யாரவன் என்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. லன்ச் டைமில் ஒருநாள் அவன் அலுவலகத்திற்குச் சென்றாள். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். கல்யாணம் நடக்குதோ, இல்லையோ அட்லீஸ்ட் ஒரு மனிதரைத் தெரிஞ்சு வெக்கறதில் ஒண்ணும் தப்பில்லையே... அதான் உங்களை சந்திக்க நானே வந்துட்டேன்
என்றவளை வியப்போடு பார்த்தான் பரத். அம்மா தன் ஜாதகத்தைக் கொடுத்தது கூட அவனுக்குத் தெரியாது. அப்படியா
என்றான் ஆச்சரியமாக. அதே நேரம் அவளுடைய வெளிப்படையான பேச்சும், அணுகுமுறையும் அவனுக்குப் பிடித்திருந்தது. அதன் பிறகு இரண்டு, மூன்று முறை லிஃப்ட் கியூவில் இருவரும் பார்த்துக் கொள்ள நேரிட சிரிப்பும், ஒன்றிரண்டு வார்த்தை பேசுவதும் தொடர்ந்தது.
ஜாதகம் வந்ததுன்னீங்க...! அதென்ன ஆச்சு? சேர்ந்துச்சா, சேரலையா
? அப்புறம் ஒரு தகவலும் இல்லை பரத் கேட்க, பவானி உதடு பிதுக்கினாள். தெரியலையே... வேணும்னா வீட்ல கேட்டு சொல்லவா?
வேணாம்... நா ஜஸ்ட் கேட்டேன்
அவன் அவசரமாய் மறுத்தாலும் அவள் வீட்டில் கேட்கத்தான் செய்தாள்.
அதுவா...?
அம்மா அலட்சியமாய் உதடு சுழித்தாள்.
அதை டிராப் பண்ணிட்டோம்
என்றாள்.
ஏம்மா...?
பையன் நல்ல பையன்தானாம். ஆனா ரொம்ப சாதாரண குடும்பம். ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் பையன் தலையெடுத்துதான் குடும்பத்தை நல்லபடியா வெச்சிருக்கானாம். அக்கா கல்யாண கடனே இன்னும் அடையலையாம். குடும்பம் எல்லாம் இன்னமும் மதுரைல ஒரு ஒண்டுக்குடித்தனத்துலதான் இருக்காங்களாம். கல்யாணத்துக்கப்புறம் நீ மாமியார் வீட்டுக்குன்னு போனா, அந்த ஒண்டுக்குடித்தன பொந்துக்குள்ளதான் இருக்கணும். அதான் இன்னும் நல்ல இடமா பார்க்கலாம்னு வெச்சுட்டோம்.
அம்மா சொல்ல பவானிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இதை எப்படி பரத்திடம் சொல்வது? அவன் முகம் வாடி விடாதா?
அதன் பிறகு ஒரு வாரம் வரை பரத் அவள் கண்ணில் படவில்லை. எட்டாவது நாள் பரத்தே அவளைத் தேடி வந்தான். கையிலிருந்த சாக்லேட் கவரை நீட்டினான்.
என்ன விஷயம்?
எனக்குப் புரொமோஷன் ஆயிருக்கு.
சந்தோஷம். வாழ்த்துக்கள்!
என்றபடி பையில் கைவிட்டு ஒரு சாக்லேட் எடுத்துக் கொண்டாள். தேங்க்ஸ். இவ்ளோ தூரம் என்னைத் தேடி வந்து ஸ்வீட் கொடுத்ததுக்கு.
அவன் சிரித்தபடி விடைபெற, பக்கத்து கம்ப்யூட்டரில் வேலையாயிருந்த அனிதா திரும்பினாள்.
ஏய்... பவி, இந்தாளை உனக்குத் தெரியுமா?
ஏன்?
நம்ம அஸிஸ்டன்ட் மானேஜர் சுமி தெரியுமில்ல?