Oomai Kuyil
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsOru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsUdal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Suzhal Rating: 5 out of 5 stars5/5Savithriyin Kathapaathiram Rating: 4 out of 5 stars4/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Sippikkul Muthu Rating: 5 out of 5 stars5/5Kalyana Raagam Rating: 5 out of 5 stars5/5Vetti Vergal Rating: 5 out of 5 stars5/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Santhana Malargal Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Anbukku Panjamillai Rating: 5 out of 5 stars5/5Chinnanchiru Kiliye! Rating: 5 out of 5 stars5/5Penn Vannam Kandean Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Oru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsMann Bommai Rating: 5 out of 5 stars5/5Thanthai Sol Mikkathor Rating: 0 out of 5 stars0 ratingsKadhalai Vittu Vidu...! Rating: 5 out of 5 stars5/5Nadhiyai Thedi Vandha Kadal Rating: 5 out of 5 stars5/5Shyamala... Rating: 5 out of 5 stars5/5Paarkadal Rating: 5 out of 5 stars5/5Suriyagrahanam Rating: 5 out of 5 stars5/5
Related to Oomai Kuyil
Related ebooks
Sila Nerangalil Sila Manushigal Rating: 0 out of 5 stars0 ratingsThelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Naathanar 2 Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsPonnaadai Rating: 4 out of 5 stars4/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsThalattuthe Vaanam! Rating: 0 out of 5 stars0 ratingsAndha Naalum Vandhitatho? Rating: 5 out of 5 stars5/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Pennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsSuriyagrahanam Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Engey Enathu Kavithai? Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Kannadi Konangal Rating: 4 out of 5 stars4/5Vizhigal Ezhuthiya Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsKannamochi Yenada? Rating: 0 out of 5 stars0 ratingsMandiyitten Madhana! Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsNilavey Mugam Kattu Rating: 5 out of 5 stars5/5Thaalam Thappiya Paadal Rating: 0 out of 5 stars0 ratingsAlamarathu Kiligal Rating: 0 out of 5 stars0 ratingsKaalamellaam Naan Varuven Rating: 0 out of 5 stars0 ratingsThoorathu Nilavu Rating: 4 out of 5 stars4/5Un Thol Sera Aasaithan Rating: 0 out of 5 stars0 ratingsAnbirku Thalaivanangu Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNeruppai Oru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Varuvaan Nayagan! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Oomai Kuyil
0 ratings0 reviews
Book preview
Oomai Kuyil - Vidya Subramaniam
https://www.pustaka.co.in
ஊமைக்குயில்
Oomai Kuyil
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
1
உப்பு போட்டுதானே சோறு தின்றீங்க? வாங்கின காசை திருப்பிக் கொடுக்க வக்கில்லாதவனுக்கெல்லாம் எதுக்குய்யா வேட்டி சட்ட...? அவுத்துப் போட்டுட்டு புடவைய சுத்திக்கிட்டு அலைய வேண்டியதுதானே?
மயில்சாமி மாமா நடுக்கூடத்தில் நின்று தொண்டை கிழியக் கத்த, வீட்டிலிருந்த அத்தனை பேரும் புழுவாய்ச் சுருண்டு நின்றார்கள். நாச்சியப்பன் கையெடுத்துக் கும்பிட்டார்.
சத்தம் போடாதீங்க மயில்சாமி. நா உங்களை வஞ்சிக்க மாட்டேன். எப்டியாச்சும் குடுத்துடறேன். இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்குங்க.
எட்டு வருசமா வராத காசு, இன்னும் ஒரு மாசத்துலதான் வந்துடப் போவுதாக்கும்! எப்படியாம்? கொல்லையில பண மரம் ஏதாச்சும் நட்டு வெச்சிருக்கயோ? அது குலை குலையா காய்ச்சு கொட்டப்போவுதோ?
வெண்கலக் குரலில் எகத்தாளமாகக் கேட்டார் மயில்சாமி. அப்பாவுக்குப் பின் அதுவரை பொறுமையாக இருந்த யசோதா முன்னால் வந்தாள்.
இதப்பாருங்க மாமா, பணம் குடுத்துட்ட காரணத்தாலயே வாய்க்கு வந்தபடி பேசாதீங்க. கஷ்டம் வந்தா நீங்களும்தான் கடன் வாங்குவீங்க. நாங்க மரம் நடறோமோ செடி நடறோமோ அதைப்பத்தி உங்களுக்கு என்ன? ஒரு மாசத்துல உங்க பணத்தை எப்டியாச்சும் குடுத்துடறோம். அதுவரை அனாவசியமா வார்த்தையக் கொட்டிராதீங்க.
அடிசக்கை! கைநீட்டி காசு வாங்கின கழுதைகளுக்கே இம்புட்டு ரோசம்னா பாடுபட்டு சம்பாரிச்ச காசை கடனா கொடுத்துட்டு கொடுத்த காசைக் கேட்டு நாயா அலையற எனக்கு எவ்ளோ இருக்கும்? கைநீட்டி வாங்கும்போது என்னமா குழைஞ்சாரு உங்கப்பான்னு தெரியுமா உனக்கு? குடுக்கும்போது நல்லவன்! திருப்பிக் கேட்டுட்டா ராட்சஸன்! அப்படித்தானே?
எங்க போதாத காலம் மாமா. கீழ்நிலைல நாங்களும், மேல்நிலைல நீங்களும் இருக்கீங்க. சமயத்துக்கு நீங்க செய்த உதவியை நாங்க சத்தியமா மறந்துடல. பணத்தை திருப்பிக் கொடுக்கக் கூடாதுன்னும் எண்ணமில்ல. இன்னும் ஒரு மாசத்துல எங்க தலைய அடமானம் வெச்சாவது உங்க பணத்தைத் திருப்பிடறோம். தயவு செய்து இதுக்கு மேலும் பேசி எங்க மனசைப் புண்படுத்தாம கிளம்புங்க
யசோதா கையெடுத்துக் கும்பிட்டாள்.
மயில்சாமி அவளை ஏற இறங்கப் பார்த்தார். ஒரு வினாடி தன்னையும் மறந்து வியந்தார். இப்படி ஒரு உயரமும் வாளிப்பும் இதுவரை எங்கும் அவர் கண்டதில்லை. அவரைவிட இரண்டங்குலம் உயரமான பெண். உயர்தரமான கல்லில் தேர்ந்த சிற்பி பார்த்துப் பார்த்து வடித்தெடுத்த சிற்பக்கடைசல் மாதிரி என்ன ஒரு நேர்த்தியான உருவம்! எந்தக் கூட்டத்தில் இருந்தாலும் பளிச்சென்று தனியே தெரியும் ஆகிருதி. தேவலோகப் பெண்கள்தான் இப்படி அசாத்தியமான உயரத்தோடு இருப்பார்கள் என்று படித்திருக்கிறார். அப்படிப்பட்ட உயரமும், அதற்கேற்ற தேகமும், பளபளவென்று ஒரு மாநிறமும், துருதுருவென்று கண்ணும், மூக்கும், உதடும், கேசமும் எப்படி இந்த சாதாரணப் பெண்ணிடம் வந்து சேர்ந்தது?
அந்த வியப்புடனே அவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வாசல் இறங்கிச் சென்றார்.
'உன்னை யாரு குறுக்கால பேசக்கூப்ட்டது?" அப்பா கோபமாகக் கேட்டார்.
பின்ன...? அவரு பாட்டுக்கு சகட்டுமேனிக்கு பேசிட்டே போறார். நாம என்ன ஏமாத்திட்டமா... இல்ல ஏமாத்திரணும்னு திட்டம் போட்டுட்டமா...?
அப்டித்தாண்டி பேசுவாங்க. அவரு சொல்றாப்பல காசு வாங்கும்போது ஆயிரம் கூழைக்கும்புடு போட்டுத்தானே வாங்கினோம்.,, அப்பொ நல்லவராத்தானே தெரிஞ்சான்! ஒண்ணா ரெண்டா, கைநீட்டி பத்தாயிரம் வாங்கி எட்டு வருஷமாகுது. தூரத்து சொந்தக்காரனா இருக்கக் கொண்டு அடமானம், கடன் பத்திரம்னு எதுவுமில்லாம ஒரு நம்பிக்கைல கைமாத்தா கொடுத்தான். எவன் அப்படி தூக்கிக் கொடுப்பான் சொல்லு.? அந்த நல்ல குணத்துக்கு நாம என்ன மரியாதை செய்தோம்? ஒழுங்கா வட்டிகூட கொடுக்கல. எட்டு வருஷம்.. இதோ அதோன்னு பேசாம இருந்துட்டோம். இப்ப அசலும் வட்டியும் குட்டி போட்டு முப்பதாயிரத்துக்கு சேர்ந்து நிக்குது. கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசை கடனா தந்துட்டு அது எட்டு வருஷமாகியும் திரும்பி வராம இருந்தா எவன் பொறுத்துக்குவான்? நம்மகிட்ட தப்பை வெச்சுக்கிட்டு உதவி செய்தவனை குற்றம் சொல்றது மகாபாவம்!
அப்பா நிறுத்த யசோதா மெளனமானாள். அப்பா சொல்வதும் நியாயம் எனத் தோன்றியது. மாமாவிடம் அப்படித் துடுக்குத்தனமாய் பேசியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது.
கொட்டினதை இனி அள்ள முடியாது. ஒரு மாசத்துல எப்டி இவ்ளோ ரூபாயத் திருப்பிக் கொடுப்பீங்க? எந்த தைரியத்துல அப்டிச் சொன்னீங்கன்னு சொல்லுங்க.
பார்ப்பம். நாம கும்பிடற சாமி நமக்கு ஏதாச்சும் வழி காட்டாமையா போயிரும்?
நாம ஏதாச்சும் முயற்சி எடுத்தால்ல சாமி ஒத்தாசைக்கு வரும்!
யசோதா தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
அந்த ஊரின் ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியை வேலை அவளுக்கு. பிள்ளைகள் வருகிறார்களோ, படிக்கிறார்களோ இல்லையோ, மாதா மாதம் முப்பதாம் தேதி டாணென்று சம்பளம் வந்துவிடும். அவள் சம்பளத்தில்தான் குடும்பவண்டி, நொண்டியடிக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வேலை கிடைத்து இரண்டு வருடம்தான் ஆகிறது. அதற்கு முன்புவரை அப்பா வாங்கும் தினக்கூலியில்தான் அடுப்பெரிந்து கொண்டிருந்தது. மூன்று பெண்ணுக்குப் பிறகு நான்காவதாக ஒரு பிள்ளைக்கு அம்மாவும் அப்பாவும் ஆசைப்பட்டதுதான் எல்லாக் கஷ்டத்திற்கும் காரணம். யசோதா பிறந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து அம்மா நான்காவதாக கர்ப்பம் சுமந்தபோது பெரியக்கா சுமதிக்கு கல்யாணம் நிச்சயமாகியிருந்தது. மாப்பிள்ளை தாலுகா ஆபீசில் பியூனாயிருந்தான். ஐந்து பவுன் நகை போட்டு இரண்டாயிரம் ரூபாய் வரதட்சணை கொடுத்து தன் சக்திக்கேற்றாற்போல் கல்யாணம் செய்து வைத்தார் அப்பா. கல்யாணத்திற்குப் பிறகு அடிக்கடி மாமனார் வீட்டுக்கு வந்து தங்குவதற்கு வருவான் மாப்பிள்ளை சந்தானம். யசோதா ஸ்கூலுக்குப் போய்விடுவாள். அம்மாவும் அப்பாவும் கூலி வேலைக்குப் போய்விடுவார்கள். பத்தாங்கிளாஸ் முடித்திருந்த இரண்டாவது அக்கா சாந்தி மட்டும்தான் வீட்டில் இருப்பாள். ஆபீஸ் வேலையா வந்தேன், அதற்கு வந்தேன் இதற்கு வந்தேன் என்று சொல்லிக் கொண்டு வந்து தங்கும் சந்தானத்தை உபசரிக்க வேண்டிய வேலை சாந்தியின் தலையில்தான்.
சந்தானம் பேச்சில் கெட்டிக்காரன். பிழைக்கத் தெரிந்த அதிசாமர்த்தியசாலி. அவன் பேசிப்பேசி விரித்த வலையில் சுலபமாக விழுந்தாள் சாந்தி. கல்யாணம் என்ற செலவின்றியே சாந்திமுகூர்த்தம் நடந்து முடிந்தது. அக்காவுக்கே சக்களத்தியானாள் சாந்தி. விஷயம் வெளியில் ஒருநாள் நாறிப்போக, வீடு தலையில் கை வைத்துக் கொண்டது. சுமதியக்கா ஒப்பாரி வைத்து அழுதாள். நாசமாய் போகணும் என்று புருஷனையும் தங்கையையும் சபித்தாள்.