என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Badminton"

    • தெலுங்கானாவில் அகில இந்திய சப்-ஜுனியர் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், பள்ளியின் முதல்வர் முருகவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    நெல்லை:

    தெலுங்கானாவில் அகில இந்திய சப்-ஜுனியர் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில்

    வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷிகா இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தங்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், பள்ளியின் முதல்வர் முருகவேல், உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன்குமார், பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • மாநில இறகு பந்து போட்டிக்கு பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
    • உடற்கல்வி ஆசிரியர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    சிவகங்கை

    சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியை திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடத்தியது.

    இதில் 19 வயதிற்குட்பட்ட இறகுபந்து ஒற்றையர் பிரிவில் சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிராமி முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.

    வெற்றி பெற்ற மாணவியை முதல்வர் புஷ்பம், உடற்கல்வி ஆசிரியர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • சாத்விக்- சிராக் ஜோடி கடந்த வாரம் நடந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி
    • இந்த சீசனில் இந்தியா பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    பேசெல்:

    ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ரென் ஜியாங்- டான் கியாங் ஜோடியை 54 நிமிடங்களில் 21-19, 24-22 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    சாத்விக்- சிராக் ஜோடி கடந்த வாரம் நடந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்த நிலையில், இன்றைய வெற்றி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. இந்த சீசனில் இந்தியா பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். சாத்விக்-சிராக் ஜோடிக்கு இது ஐந்தாவது சாம்பியன் பட்டமாகும்.

    • ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 6-வது ஆண்டாக பூப்பந்து போட்டி நடைபெற்றது.
    • கெங்கமுடி அணி வெற்றி பெற்றது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கப்பச்சி கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 6-வது ஆண்டாக பூப்பந்து போட்டி நடைபெற்றது. இதன் இறுதிபோட்டி நடந்தது.

    இதில் இளித்துறை அணிக்கும் கெங்கமுடி அணியும் மோதின. இந்த போட்டியில் கெங்கமுடி அணி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் அ.தி.மு.க மாவட்ட செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் கலந்து கொண்டனர். அவருக்கு கிளப் சார்பில் மேளத்தளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.மேலும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் வளர்ச்சிக்காக ரூபாய்_25000 நிதி உதவி வழங்கினார்.

    • 1965ம் ஆண்டு ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
    • சாத்விக் மற்றும் சிராக் 2022ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர்.

    துபாய்:

    துபாயில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஓங் யியூ சின்-டியோ யி ஜோடியை 16-21, 21-17, 21-1 என்ற செட்கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் 58 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இந்த சீசனில் சாத்விக்-சிராக் வென்றுள்ள இரண்டாவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    இதற்கு முன்பு லக்னோவில் 1965ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா என்ற வீரர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின்னர் முதல் முறையாக இந்த ஆண்டு இந்திய வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    ஆசிய சாம்பியன்ஷிப் பட்டம் தவிர, சாத்விக் மற்றும் சிராக் 2022ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர். உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் உலக சுற்றுப்பயணத்தில் ஐந்து பட்டங்களை வென்றுள்ளனர்.

    • கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி ஜோடி, வெள்ளிப் பதக்கம் வென்றது.
    • இவர்களின் சாதனை நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன.

    புதுடெல்லி:

    ஸ்லோவேனியாவின் மரிபோர் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா தங்கம் வென்று அசத்தி உள்ளார். இவர், ஆடவர் ஒற்யைர் இறுதிப்போட்டியில் தைவான் வீரர் சூ லீ யாங்கை 21-18 21-14 என்ற நேர்செட்களில் வென்றார்.

    இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி ஜோடி, வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்த ஜோடி அரையிறுதியில் டென்மார்க் ஜோடியை 21-15 21-19 என்ற செட்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் இறுதிப்போட்டியில் டென்மார்க்கின் மற்றொரு ஜோடியிடம் 12-21 13-21 என தோல்வியடைந்தது. 

    ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி

    ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி

    இந்திய பேட்மிண்டனின் தொடர் வளர்ச்சி மற்றும் வெற்றியை இந்த வீரர்களின் சாதனைகள் பிரதிபலிக்கின்றன. அத்துடன், நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன.

    • காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சின்னமணிநகர் இறகுபந்து கழகம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடியது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சின்னமணிநகர் இறகுபந்து கழகம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடியது.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இறகு பந்து கழக தலைவரும், கவுன்சிலருமான சந்திரபோஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மேலாளர் ராஜேந்திரகுமார் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து அவர், இதுபோன்ற விளையாட்டுகளில் பங்குபெற்று பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என்று விளையாட்டு வீரர்களை வாழ்த்தி பேசினார்.

    விழாவில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் பொன்னப்பன் மற்றும் பாஸ்கர், செந்தில்குமார், மணி, அல்பட் உள்பட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • பக்கவாட்டு சுவற்றில் பேட்மிண்டன் பிரபலங்கள் படங்கள்
    • வீரர்கள், பயிற்சியாளர்கள் அமர இருக்கைகள் அமைப்பு

    பொதுவாக மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பகுதி வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்படும். சில இடங்களில் பூங்கா உருவாக்கி, பயன்படுத்தப்படும். ஆனால், அசாமில் உள்ள ஒரு இடத்தில் தொழில் அதிபர் ஒருவரால் ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதி அழகிய பேட்மிண்டன் மைதானமாக உருவாகியுள்ளது.

    அசாம் மாநிலம் ஜோர்ஹத் மாவட்டத்தில் உள்ள நா-அலி (Na-Ali) ரெயில்வே பாலம் செல்கிறது. ரெயில்வே பாலத்திற்கு கீழ் நீளமான இடம் காலியாக இருந்தது. இந்த இடத்தை பேட்மிண்டன் மைதானமாக மாற்றினால் என்ன? என அந்த பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.பி. அகர்வாலாவிற்கு தோன்றியது.

    இதுகுறித்து ஜோர்ஹாட் மாவட்ட பேட்மிண்டன் நிர்வாகத்தை அணுக, அவர்களும் அனுமதி வழங்கினர். அதனைத் தொடர்ந்து அகல்வாலா அந்த இடத்த அழகிய பேட்மிண்டன் மைதானமாக மாற்றினார். சுவற்றின் இரு புறங்களிலும், பேட்மிண்டன் பிரபலங்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன.

    வீரர்கள், பயிற்சியாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நுழைவுத் தேர்வு மிகவும் குறைவாக நிர்ணயிக்க இருப்பதால், பேட்மிண்டன் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும்.

    இந்த மைதானத்தை ஜோர்ஹாட் பேட்மிண்டன் சங்கம் பராமரிக்கும் என அசாம் மாநில பேட்மிண்டன் சங்க செயலாளர் திகான்டா புர்காகோஹைன் தெரிவித்துள்ளார்.

    தொழில் அதிபர் அகர்வாலா, தனது தந்தையின் நினைவாக இந்த மைதானத்தை கட்டி கொடுத்துள்ளார். கடந்த 16-ந்தேதி இந்த மைதானத்தை அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மான தொடங்கி வைத்தார். விரைவில் இந்த மைதான நடைமுறை பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

    • தேசிய அளவிலான இறகுப்பந்தாட்ட போட்டியில் மாணவி ரேஷிகா தங்க பதக்கம் பெற்றார்.
    • ஆசிய சப்-ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி சார்பாக ரேஷிகா தேர்வு பெற்றுள்ளார்.

    நெல்லை:

    தேசிய அளவிலான இறகுப்பந்தாட்ட போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷிகா கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றார்.

    இதன் மூலம் அடுத்த மாதம் சீனாவில் 17-ந்தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற இருக்கும் ஆசிய சப்-ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி சார்பாக தேர்வு பெற்றுள்ளார். இந்திய அணிக்கு தேர்வு பெற்றுள்ள மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் முனைவர். திருமாறன், முதல்வர் முருகவேள், ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன்குமார், பூச்சியம்மாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஹெச்.எஸ். பிரனோய் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றார்.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 22-24 24-22 21-19 என தோல்வியடைந்தது.

    தாமஸ் கோப்பை பேட்மிண்டன் சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வருகிறது. இந்தோனேசியா, இந்தியா ஆகியவை ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளனர். இரு அணிகளும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    இந்த நிலையில் குரூப்பில் யார் முதல் இடம் பிடிப்பதற்கான கடைசி லீக்கில் இரு நாடுகளும் மோதின. இதில் இந்தோனேசியா 4-1 என வெற்றி பெற்றது.

    2022-ல் நடைபெற்ற தாமஸ் கோப்பை போட்டியில் இந்தோனேசியாவை 3-0 என வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்த நிலையில் அதற்கு பழிவாங்கும் விதமாக தற்போது இந்தோனேசியா இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

    ஹெச்.எஸ். பிரனோய் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றார். இதனால் இந்தியா 1-0 (13-21 21-12 21-12) என முன்னிலைப் பெற்றது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 22-24 24-22 21-19 என தோல்வியடைந்தது. இதனால் இந்தியா- இந்தோனேசியா ஸ்கோர் 1-1 என சமநிலை ஆனது.

    லக்ஷயா சென் 18-21 21-16 17-21 எனத் தோல்வியடைந்தார். இதனால் இந்தோனேசியா 2-1 என முன்னிலைப் பெற்றது.

    4-வது போட்டியில் த்ருவ் கபிலா- சாய் பிரதீக் ஜோடி 20-22, 11-21 என நேர்செட் கேமில் தோல்வியடைந்தது. கடைசி போட்டியில் கிதாம்பி ஸ்ரீகாந்த் முதல் கேம்-ஐ 21-19 எனக் கைப்பற்றினார். அதன்பின் 2-வது மற்றும் 3-வது கேம்களை 14-21, 22-24 இழந்தார். இதனால் இந்தியா 1-4 எனத் தோல்வியை தழுவியது.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா ஏமாற்றம் அடைந்தார்
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மெய்ராபா லுவாங் மெய்ஸ்னாம் வெற்றி பெற்றார்.

    தாய்லாந்து ஓபன் (சூப்பர் 500) பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி சீன ஜோடியை எதிர்கொண்டது. இதில் 21-16, 21-11 என நேர்செட் கேமில் இந்திய ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சலிகா உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஹான் யூயே-வை எதிர்கொண்டார். இதில் அஷ்மிதா 15-21, 21-12, 12-21 எனத் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மெய்ராபா லுவாங் மெய்ஸ்னாம் காலிறுதிக்கு முன்னேறினார். 84-வது தரவரிசையில் உள்ள இவர் 54-வது தரவரிசையில் இருக்கும் மேட்ஸ் கிறிஸ்டன்சென்-ஐ எதிர்கொண்டார். இதில் 21-14, 22-20 என வெற்றி பெற்றார்.

    • சாத்விக்- சிராக் ஜோடி 21-11, 21-12 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது.
    • காலிறுதியில் மலேசிய ஜோடியை 21-7, 21-14 என வீழ்த்தியிருந்தது.

    தாய்லாந்து ஓபன் (சூப்பர் 500) பேட்மிண்டன் தொடரில் இந்திய ஆண்கள் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    அரையிறுதியில் தைவான் ஜோடியை எதிர்கொண்டது. தங்களைவிட குறைவான தரவரிசையில் உள்ள தைவான் ஜோடியை மிகவும் எளிதாக வீழ்த்தியது.

    இந்திய ஜோடியின் ஆட்டத்தை தைவான் ஜோடியால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் சாத்விக்- சிராக் ஜோடி 21-11, 21-12 என்ற நேர்செட் கேமில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    காலிறுதியில் மலேசிய ஜோடியை 21-7, 21-14 என எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சீன ஜோடியை எதிர்கொள்கிறது.

    ×