என் மலர்
நீங்கள் தேடியது "Car"
- நெல்லை சந்திப்பை சேர்ந்தவர் முப்பிடாதி கார் டிரைவர்
- பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை விமான நிலையம் சென்றார்
கயத்தாறு:
நெல்லை சந்திப்பை சேர்ந்தவர் முப்பிடாதி ( வயது 28). கார் டிரைவர். இவர் நேற்று இரவு நெல்லையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை விமான நிலையம் சென்றார். அங்கு பயணிகளை இறக்கி விட்டு விட்டு நெல்லை திரும்பினர்.
இன்று காலை கயத்தாறு சுங்கச்சாவடி அருகே வந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தவாறு நின்றது. இதில் கார் முற்றிலும் சேதமானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக முப்பிடாதி உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு போலீசார் முப்பிடாதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே மினி வேன்-கார் மோதி முதியவர் பலியானார்.
- துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 11 பேர் காயமடைந்தனர்.
திருமங்கலம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது தந்தை இறந்த துக்க நிகழ்ச்சிக்காக வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டியை சேர்ந்த சோலையப்பன், குருசாமி, பழனிச்சாமி, முப்பிடாதி, ஆறுமுகம், அழகர்காளை, முத்துக்காளை, மணி உள்ளிட்ட 11 பேர் மினி வேனில் புறப்பட்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் அதே வேனில் விராலிப்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி வளைவில் சென்றபோது திருமங்கலத்தில் இருந்து வந்த கார், மினி வேன் மீது மோதியது. இதில் மினி வேன் தலை குப்புற கவிழ்ந்தது. வேனில் பயணம் செய்த 11 பேரும் படுகாயம் அடைந்தனர். காரில் வந்த தென்காசி சித்தாபுரத்தை சேர்ந்த சுப்புராஜூம்(வயது59) காயமடைந்தார்.
தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காயமடைந்த சோலையப்பன்(68) மதுரைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரெஸ்ஸா காரின் புது வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய பிரெஸ்ஸா எஸ்யுவி மாடல் இரண்டு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் CNG கிட் கொண்ட கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் பிரெஸ்ஸா எஸ்யுவி மாடலின் CNG வேரியண்டை மாருதி சுசுகி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
விரைவில் அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், மாருதி சுசுகி பிரெஸ்ஸா எஸ்யுவி-யின் CNG வெர்ஷனின் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் பற்றிய தகவல்கள் அந்நிறுவன வலைதளத்தில் இருந்தே லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கிறது.

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இந்தியாவில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட முதல் CNG எஸ்யுவி என்ற பெருமையை மாருதி சுசுகி பிரெஸ்ஸா பெறும். இத்துடன் நாட்டின் முதல் ஆட்டோமேடிக் CNG பயணிகள் கார் என்ற பெருமையையும் பெறும். முதல் மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களில் CNG வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பதை அடுத்து ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் வாகன விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய பிரெஸ்ஸா மாடலிலும் 1.5 லிட்டர் NA என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இதே என்ஜின் மாருதி சுசுகி எர்டிகா எம்பிவி மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 90 ஹெச்பி பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது.
- ஹோண்டா நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் வெளியீட்டு விவரங்களை ஹோண்டா அறிவித்து இருக்கிறது.
ஜப்பானை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹோண்டா இந்திய சந்தையில் புது காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் நவம்பர் 2 ஆம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாகும்.
2023 இந்திய ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி மாடல் அமேஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியா உள்பட உலக நாடுகளில் டீசல் என்ஜினுக்கான மோகம் குறைவதை அடுத்து இந்த காரின் டீசல் என்ஜின் வேரியண்ட் இறுதிக்கட்ட உற்பத்தியை எட்டுவது கடினம் தான்.

டீசல் வேரியண்டிற்கு மாற்றாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவியின் பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம். இது சமீபத்திய சிட்டி செடான் மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கும் என தெரிகிறது. தற்போது செடான் பிரிவில் சிட்டி மாடல் மட்டுமே ஹைப்ரிட் வடிவில் ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அட்கின்சன் சைக்கிள், இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன.
இவை இணைந்து 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இரு எலெக்ட்ரிக் மோட்டார்களில் ஒன்று அல்டர்நேட்டர் போன்று செயல்படும் நிலையில், மற்றொரு மோட்டார் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. இதே போன்ற செட்டப் புதிய ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
- ஜீப் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கிராண்ட் செரோக்கி மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய ஜீப் ஃபுல்-சைஸ் எஸ்யுவி மாடல் இந்திய ஆலையிலேயே அசெம்பில் செய்யப்பட இருக்கிறது.
ஜீப் இந்தியா நிறுவனம் 2022 கிராண்ட் செரோக்கி மாடலை நவம்பர் 11 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கிராண்ட் செரோக்கி மாடல் இந்தியாவில் ஜீப் அசெம்பில் செய்யும் நான்காவது மாடல் ஆகும். முன்னதாக ஜீப் காம்பஸ், மெரிடியன் மற்றும் ராங்ளர் போன்ற மாடல்களை ஜீப் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவை அடுத்த ரங்கூன் ஆலை ஜீப் நிறுவனத்தின் வலதுபுற டிரைவ் யூனிட்களுக்கான உற்பத்தி மையமாக மாறுகிறது. புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த என்ஜின் செயல்திறன் பற்றி ஜீப் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

இது மட்டுமின்றி புதியகாரில் குவாட்ரா-டிராக் 4x4 சிஸ்டம்- ஆட்டோ, ஸ்போர்ட், ஸ்னோ மற்றும் மட்/சேண்ட் என நான்கு டிரைவ் மோட்கள் வழங்கப்பட இருக்கிறது. டிசைனை பொருத்தவரை புதிய தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 7 ஸ்லாட் கிரில், எல்இடி டிஆர்எல்-கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், டூயல் எக்சாஸ்ட் டிப், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.
காரின் உள்புறத்தில் ADAS அம்சங்கள், 10.1 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பவர்டு முன்புற இருக்கைகள், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங், டூயல் டோன் இண்டீரியர் தீம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது.
- ஹோண்டா நிறுவனம் தனது புது எஸ்யுவி மாடலுக்கான வெளியீட்டு விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் WR-V பெயரில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய எஸ்யுவி மாடலை அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் "WR-V" பெயரில் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய எஸ்யுவி மாடல் 2021 நவம்பர் மாத வாக்கில் ஹோண்டா அறிமுகம் செய்த RS எஸ்யுவி கான்செப்ட் மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் ஆகும்.
புதிய கார் வெளியீட்டை உணர்த்தும் ஒரே டீசரை தான் ஹோண்டா இதுவரை வெளியிட்டு உள்ளது. இந்த டீசரின் படி புதிய ஹோண்டா எஸ்யுவி மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், இண்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள், ரூப் ரெயில்கள், டூயல் டோன் பெயிண்ட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும் என உறுதியாகி இருக்கிறது. வெளிநாடுகளில் இந்த கார் சோதனை செய்யப்பட்டது. அதில் புதிய கார் WR-V பெயரில் விற்பனைக்கு வரும் என தெரியவந்துள்ளது.

காட்சிப்படுத்தப்பட்ட மாடலில் பெரிய க்ரோம் ஸ்டட் செய்யப்பட்ட முன்புற கிரில், செங்குத்தான பாக் லேம்ப் ஹவுசிங், சில்வர் ஸ்கிட் பிளேட், பின்புறம் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் இண்டீரியர் மற்றும் என்ஜின் விவரங்கள் மர்மமாக வைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த எஸ்யுவி மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூப் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் நவம்பர் 2 ஆம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் சர்வதேச வெளியீடு இந்தோனேசியாவில் நடைபெற இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும்.
ஹோண்டா எஸ்யுவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் அட்கின்சன் சைக்கிள், இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இவை இணைந்து 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இரு எலெக்ட்ரிக் மோட்டார்களில் ஒன்று அல்டர்நேட்டர் போன்று செயல்படும் நிலையில், மற்றொரு மோட்டார் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. இதே என்ஜின் முன்னதாக ஹோண்டா சிட்டி மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.
- பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய X சீரிஸ் கார் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது M பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை ஸ்பெஷல் எடிஷன் கார்களை வெளியிட்டு கொண்டாடி வருகிறது.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் X6 ஜாரெ M எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ X6 ஜாரெ M எடிஷன் விலை ரூ. 1 கோடியே 11 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது பிஎம்டபிள்யூ X6 ஸ்டாண்டர்டு எடிஷனை விட ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
ஜாரெ M எடிஷன் சீரிசில் ஒன்பதாவது மாடலாக புதிய X6 அறிமுகமாகி இருக்கிறது. X6 ஜாரெ M எடிஷன் மாடல் பிளாக் சபையர், M கார்பன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்த எஸ்யுவி மாடலில் கிளாஸ் பிளாக் நிற முன்புற கிரில், 20-இனஅச் பிளாக் M அலாய் வீல்கள், ரெட் நிற பிரேக் கேலிப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. பொனெட்டில் உள்ள பிஎம்டபிள்யூ லோகோ M டிரீட்மெண்ட் பெற்றுள்ளது.

காரின் உள்புறம் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், டெம்பரேச்சர் கண்ட்ரோல் வசதியுடன் கப் ஹோல்டர்கள், பவர்டு ஸ்போர்ட்ஸ் சீட்கள், சென்சாஃபின் இருக்கை மேற்கவர்கள், டகோரா ரெட் ஸ்டிச்சிங் போன்ற அம்சங்கள் உள்ளன. M ஸ்போர்ட் வெர்ஷனை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதால், இந்த காரில் M சார்ந்த அம்சங்களான M லெதர் ஸ்டீரிங் வீல், M ஸ்போர்ட் பிரேக்குகள், M ஸ்போர்ட் எக்சாஸ்ட் சிஸ்டம், அடாப்டிவ் M சஸ்பென்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
என்ஜினை பொருத்தவரை எவ்வித மாற்றமும் இன்றி 3.0 லிட்டர், ஆறு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 335 ஹெச்பி பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கூரை வீட்டுக்குள் புகுந்தது.
- அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் சேதமின்றி உயிர்தப்பினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தீபன். கார் டிரைவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (வயது 50), ரூபி (58) இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு விழுப்புரத்தில் உள்ள நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். மீண்டும் நேற்று இரவு நிகழ்ச்சி முடிந்தவுடன் விழுப்புரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் நோக்கி கார் வந்தார்.அப்போது சிதம்பரத்தில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் சாலை வளையமாதேவி அம்மன் குப்பம் பகுதி அருகே கார் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கூரை வீட்டுக்குள் புகுந்தது.
அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த கலைச்செல்வன் சத்தம் கேட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் சேதமின்றி உயிர்தப்பினர்.இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விபத்தில் காயமடைந்த சரஸ்வதி ரூபி ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாதோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களில் CNG கிட் வசதியை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- மாருதி கார்களை தொடர்ந்து நெக்சா பிராண்டு மாடல்களிலும் தற்போது CNG கிட் வழங்கப்பட உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் பலேனோ மற்றும் XL6 கார்களில் CNG கிட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நெக்சா பிராண்டு மாடல்களில் CNG வசதி பெறும் முதல் கார் மாடல்களாக இவை இருக்கும். பலேனோ பிரீமியம் ஹேச்பேக் மற்றும் XL6 எம்பிவி மாடல்கள் ஒரே மாதிரியான பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது.
மேலும் அதிக கார்களில் CNG வசதியை வழங்கும் நோக்கில், மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனம் பலேனோ மற்றும் XL6 CNG மாடல்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. மாருதி சுசுகி நிறுவன வாகனங்களில் அதிக மைலேஜ் வழங்கும் திறன் இருப்பதே அதிக வாடிக்கையாளர்களை ஈட்ட முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இதுவரை மாருதி சுசுகி நிறுவனம் ஒன்பது கார்களில் CNG கிட் வசதியை வழங்கி இருக்கிறது.

இந்த வரிசையில் தற்போது பலேனோ மற்றும் 6-சீட்டர் எம்பிவி மாடலான XL6 இணைய இருக்கிறது. CNG பிரிவில் மாருதி சுசுகி நிறுவனம் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களும் CNG கிட் வசதியை வழங்கி வருகின்றன. வழக்கமான பெட்ரோல், டீசல் எரிபொருள்களுக்கு மாற்றாக குறைந்த விலையில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான தேர்வாக CNG விளங்குகிறது.
இவை மட்டுமின்றி CNG கிட் பொருத்தப்பட்ட கார்கள் வழக்கமான பெட்ரோல், டீசல் மாடல்களை விட அதிக மைலேஜ் வழங்கி வருகின்றன. ஏற்கனவே பல்வேறு கார்களில் CNG கிட் வழங்கி வருவதை அடுத்து பலேனோ மற்றும் XL6 மாடல்களில் CNG கிட் வழங்குவது ஆச்சரியமாக பார்க்கப்படவில்லை.
- ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் டீசல் என்ஜின் கார்களின் விற்பனையை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- முற்றிலும் புது எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யும் பணிகளிலும் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. புதிய சிட்டி மாடல் சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. இது 5th Gen சிட்டி மாடலின் பேஸ்லிபிட் வெர்ஷன் ஆகும். புதிய ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மாடல் தாய்லாந்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாடல் முதற்கட்டமாக தாய்லாந்திலேயே அறிமுகம் செய்யப்படலாம்.
புதிய பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புற டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. எனினும், பவர்டிரெயின் ஆப்ஷன்கள் தற்போது விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். ஸ்பை படங்களின் படி ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மாடலில் ரி-ஸ்டைல் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், புதிய பாக் லேம்ப் ஹவுசிங், ஏர் டேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

ஸ்பை படங்களில் காரின் பின்புறம் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், இதில் ரி-ஸ்டைல் செய்யப்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். காரின் உள்புறம் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மாற்றப்பட்டு அதிக உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் மாடலிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் ஹோண்டா சிட்டி மாடலில் டீசல் என்ஜின் நீக்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது விற்பனை செய்யப்படும் டீசல் என்ஜின் கார்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் விற்பனைக்கு கிடைக்காது என்றே தெரிகிறது.
இவைதவிர ஹோண்டா ஜாஸ், WR-V மற்றும் 4th Gen சிட்டி மாடல்களின் விற்பனை விரைவில் நிறுத்தப்படும் என ஹோண்டா ஏற்கனவே அறிவித்து விட்டது. அமேஸ் மற்றும் சிட்டி மாடல்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய எஸ்யுவி மாடலை ஹோண்டா அறிமுகம் செய்ய இருக்கிறது.
- மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது CNG மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.
- மாருதி சுசுகி செலரியோ, வேகன் ஆர் மற்றும் இக்னிஸ் மாடல்களை ரிகால் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் வேகன்ஆர், செலரியோ, இக்னிஸ் கார்களின் 9 ஆயிரத்து 925 யூனிட்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ஆகஸ்ட் 3, 2022 முதல் செப்டம்பர் 1, 2022 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்கள் ரிகால் செய்யப்படுகின்றன.
ரிகால் செய்யப்படும் கார்களின் ரியர் பிரேக் அசெம்ப்லி பின் பாகத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அசெம்ப்லி பின் உடைந்து, வித்தியாசமான சத்தம் எழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும். வேகன்ஆர் மற்றும் செலரியோ மாடல்கள் மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்கள் ஆகும். இக்னிஸ் மாடல் மட்டும் நெக்சா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படுகிறது.

"ரியர் அசெம்ப்லி பின் பாகத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய தவறும் பட்சத்தில் அசெம்ப்லி பின் உடைந்து வித்தியாசமான சத்தம் எழ வாய்ப்புகள் உண்டு. நாளடைவில் காரின் பிரேக்கிங் திறன் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். வாடிக்கையாளர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நிறுவனம் சார்பில் பாதிக்கப்பட்ட யூனிட்களை ரிகால் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பாதிக்கப்பட்ட கார்கள் ரிகால் செய்யப்பட்டு இலவசமாக சரி செய்யப்படும்," என மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
ரிகால் செய்யப்படும் கார்களில் புதிதாக வழங்க மாற்று பாகங்கள் தயாராகி வருகின்றன. அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் சார்பில் பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்படுவர். அதன் பின் கார் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, பிரச்சினைகள் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக சரி செய்யப்படும்.
- மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் CNG கார் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
- முதல் முறையாக நெக்சா பிராண்டிங் காரிலும் CNG கிட் வசதியை மாருதி சுசுகி நிறுவனம் வழங்கி இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய பலேனோ மாடலில் CNG கிட் வசதியை வழங்கி இருக்கிறது. புதிய மாருதி சுசுகி பலேனோ CNG மாடல் விலை ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பலேனோ CNG மாடலை மாதாந்திர சந்தா முறையில் வாங்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பலேனோ மாடலுடன் XL6 CNG காரும் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய பலேனோ CNG மாடலில் 1197சிசி, NA, நான்கு சிலண்டர்கள் கொண்ட டூயல் ஜெட் டூயல் VVT பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 76 ஹெச்பி பவர், 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

மாருதி சுசுகி பலனோ CNG மாடல் லிட்டருக்கு 30.61 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது. புதிய பலேனோ CNG செயல்திறனும் ஸ்விப்ட் CNG மாடலின் செயல்திறனும் ஒரே அளவில் உள்ளன. பலேனோ CNG மாடலில் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்பிளே ப்ரோ, எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 40-க்கும் அதிக கனெக்டெட் கார் அம்சங்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 6 ஏர்பேக், ரியர்வியூ கேமரா, பார்க்கிங் சென்சார்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டிஎப்டி டிஸ்ப்ளே, என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், ரியர் டி-ஃபாகர், யுஎஸ்பி டைப் ஏ மற்றும் சி போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.