என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paris Olympics"

    • பரிசை ஏற்றதற்கு பலரும் சமூக வலைத்தளத்தில் வினேஷ் போகத்தை விமர்சித்து வந்தனர்.
    • 2 ரூபாய்க்கு ட்வீட் செய்து இலவச அறிவைப் பகிர்ந்துகொள்பவர்கள்... கவனமாகக் கேளுங்கள்!

    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.

    இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஜூலானா சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் கீழ் வினேஷ் போகத்துக்கு சலுகை வழங்குவதாக அரியானா அரசு அறிவித்தது.

    அதன்படி ரூ.4 கோடி ரொக்கப் பரிசு அல்லது நிலம் ஒதுக்கீடு அல்லது 'குரூப் A' அரசு வேலை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்யலாம் என்று ஹரியானா அரசு தெரிவித்திருந்தது.

    இதில் ரூ.4 கோடி பரிசுத் தொகையை வினேஷ் போகத் தேர்வு செய்தார். காங்கிரசில் இருந்துகொண்டு பாஜக அரசு தரும் பரிசை ஏற்றதற்கு பலரும் சமூக வலைத்தளத்தில் வினேஷ் போகத்தை விமர்சித்து வந்தனர்.

    இந்நிலையில் அவ்வாறு விமர்சிப்பவர்களுக்கு வினேஷ் போகத் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது,

    "2 ரூபாய்க்கு ட்வீட் செய்து இலவச அறிவைப் பகிர்ந்துகொள்பவர்கள்... கவனமாகக் கேளுங்கள்!

    உங்களுக்குத் தெரியப்படுத்த, நான் உங்களுக்குச் சொல்கிறேன் - இதுவரை, கோடிக்கணக்கான மதிப்புள்ள (விளம்பரத்தில் நடிக்கும்) சலுகைகளை நான் நிராகரித்துவிட்டேன். குளிர்பானங்கள் முதல் ஆன்லைன் கேமிங் வரை.

    ஆனால் நான் என் கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை.

    நான் எதைச் சாதித்திருந்தாலும், அதை நேர்மையான கடின உழைப்பாலும், என் அன்புக்குரியவர்களின் ஆசீர்வாதத்தாலும் செய்திருக்கிறேன். அதைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.

    சுயமரியாதை கொண்ட தாயின் பாலில் கரைந்த மண்ணின் மகள் நான். உரிமைகள் பறிக்கப்படுவதில்லை, வெல்லப்படுகின்றன என்பதை என் முன்னோர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். எனக்கு நெருக்கமான ஒருவர் சிக்கலில் இருக்கும்போது, அவர்களுடன் ஒரு சுவர் போல எப்படி பாதுகாத்து நிற்பது என்பதும் எனக்குத் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக மல்யுத்த வீராங்களைகளுக்கு பாஜகவை சேர்ந்த மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்க நடந்த போராட்டத்தில் வினேஷ் போகத் முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஜூலானா சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
    • தல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.

    இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஜூலானா சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் கீழ் வினேஷ் போகத்துக்கு சலுகை வழங்குவதாக அரியானா அரசு அறிவித்தது. அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி ரூ.4 கோடி ரொக்கப் பரிசு அல்லது அரியானா ஷாஹ்ரி விகாஸ் பிரதிகரன் (HSVP) கீழ் ஒரு நிலம் ஒதுக்கீடு அல்லது 'குரூப் A' அரசு வேலை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்யலாம் என்று ஹரியானா அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ரூ.4 கோடி பரிசுத் தொகையை வினேஷ் போகத் தேர்வு செய்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தை மாநில அரசிடம் சமர்ப்பித்து உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    நாட்டிலேயே அதிகபட்சமாக அரியானாவில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.6 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4 கோடியும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2.5 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த ஆண்டு நடக்கிறது.
    • இதற்காக பிரான்ஸ் அரசு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.

    பாரீஸ்:

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த ஆண்டு (2024) ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடக்கிறது. பிரான்சில் 100 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் விளையாட்டு நடக்க இருப்பதால் அந்நாட்டு அரசு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.

    இதற்கிடையே, பாரீஸ் ஒலிம்பிக்கில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மற்றும் அதற்கு ஆதரவாக உள்ள பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை பங்கேற்க வைக்கும் திட்டத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கையில் எடுத்துள்ளது.

    ரஷிய, பெலாரஸ் வீரர்கள் ஒலிம்பிக்கில் பொதுவான கொடியின் கீழ் பங்கேற்பார்கள். பாஸ்போர்ட் அடிப்படையில் எந்த நாட்டு வீரருக்கும் தடை விதிக்க முடியாது என கடந்த வாரம் ஐ.ஓ.சி. அறிவித்தது. இது நிகழ்ந்தால் பாரீஸ் ஒலிம்பிக்கை புறக்கணிப்போம் என உக்ரைன் எச்சரித்தது. ரஷியாவை ஒலிம்பிக்கில் அனுமதிப்பதற்கு மேலும் பல நாடுகள் எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளன.

    இந்நிலையில், போலந்து, லிதுவேனியா, லாத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா, பெலாரஸ் நாட்டு வீரர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கும்போது மற்ற நாட்டு வீரர்கள் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். இரு நாட்டு வீரர்களையும் களத்தில் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும். அத்துடன் உக்ரைன் மீதான போரை திசைதிருப்பும் விதமாக இந்த விளையாட்டு பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளன.

    இதுதொடர்பாக போலந்து விளையாட்டுத்துறை மந்திரி கமில் போட்னிக்சுக் கூறுகையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்பட 40 நாடுகள் ஒன்றிணைந்து புறக்கணிக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து புறக்கணிக்கும்போது பாரீஸ் ஒலிம்பிக்கின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

    • ஒலிம்பிக் போட்டியின் போது வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் தங்குவார்கள்.
    • 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கின் போது கொரோனா பரவல் காரணமாக உடல்ரீதியான தொடர்பை தவிர்க்கும்படி போட்டி அமைப்பாளர்கள் அறிவுறுத்தினர்.

    பாரீஸ்:

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடக்கிறது. 200 நாடுகளை சேர்ந்த ஏறக்குறைய 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தொடக்க விழாவை செயின் நதியில் நடத்த போட்டி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அதாவது தொடக்க விழாவின் முக்கிய அம்சமான வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு படகில் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் படகில் 6 கிலோமீட்டர் தூரம் ஈபிள் கோபுரம் நோக்கி பயணிக்க இருக்கிறார்கள். 45 நிமிடங்கள் படகு அணிவகுப்பை பார்க்கலாம். ஒலிம்பிக் வரலாற்றில் தொடக்க விழா ஸ்டேடியத்திற்கு வெளியே நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    ஒலிம்பிக் போட்டியின் போது வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் தங்குவார்கள். எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக 1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்கில் இருந்து ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறையை வைக்கும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கின் போது கொரோனா பரவல் காரணமாக உடல்ரீதியான தொடர்பை தவிர்க்கும்படி போட்டி அமைப்பாளர்கள் அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்த விஷயத்தில் தடை எதுவும் கிடையாது. வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் சிரமமின்றி கிடைக்கும் வகையில் 3 லட்சம் ஆணுறை வரை வைக்கப்பட இருப்பதாக ஒலிம்பிக் கிராமத்தின் இயக்குனர் லாரென்ட் மிசாட் கூறியுள்ளார்.

    ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் விநியோகிக்கப்பட்ட ஆணுறைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. "1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் ஆணுறைகள் 50,000 ஆகவும், 2008-ல் பெய்ஜிங்கில் 100,000 ஆகவும், 2012-ல் லண்டனில் 150,000 ஆகவும் உயர்ந்தது

    தென் கொரியாவில் 1988 சியோல் கோடைகால ஒலிம்பிக்கில் ஆணுறைகள் முதலில் வழங்கப்பட்டன.

    • டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு எனது தன்னம்பிக்கை அதிகரித்து இருக்கிறது.
    • எல்லாமே சரியாக அமைந்தால், 90 மீட்டர் இலக்கை பார்க்க மக்கள் ஒலிம்பிக் வரை காத்திருக்க வேண்டாம்.

    புதுடெல்லி:

    இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிலும், அதைத் தொடர்ந்து உலக தடகளத்திலும் தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். இப்போது ஜூலை - ஆகஸ்டு மாதத்தில் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக்கில் மீண்டும் மகுடம் சூடும் உத்வேகத்துடன் தன்னை தீவிரமாக தயார்படுத்தி வருகிறார். அரியானாவைச் சேர்ந்த 26 வயதான நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்துள்ளார்.

    இந்த நிலையில் தனது அடுத்தக்கட்ட இலக்கு குறித்து ஆன்லைன் மூலம் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக 90 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டி எறிய முயற்சிப்பேன். எல்லாமே சரியாக அமைந்தால், 90 மீட்டர் இலக்கை பார்க்க மக்கள் ஒலிம்பிக் வரை காத்திருக்க வேண்டாம். அதற்கு முன்பாகவே நடந்து விடும் என்று நம்புகிறேன். அதற்கு ஏற்ப தயாராகி உள்ளேன்.

    இந்த சீசன் தொடங்கிய போது உடல்தகுதி மற்றும் உடல் வலிமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினேன். ஈட்டி எறிதலுக்கு என்று பிரத்யேகமாக எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் தொழில்நுட்பத்தில் நான் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளேன். மேலும் தென்ஆப்பிரிக்கா மற்றும் துருக்கியில் மேற்ெகாண்ட பயிற்சிகள் நல்லவிதமாக அமைந்தது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு எனது தன்னம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. அதன் பிறகு இரண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ளேன். அவற்றில் ஒன்றில் வெள்ளியும், மற்றொன்றில் தங்கமும் வென்றேன். டைமண்ட் லீக் தடகளத்தில் கோப்பையை கைப்பற்றினேன். ஆசிய விளையாட்டில் பட்டத்தை தக்க வைத்தேன். டோக்கியோ மற்றும் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு இடைப்பட்ட காலத்தில் கிடைத்த இந்த வெற்றிகள் நிறைய நம்பிக்கையை தந்திருக்கிறது. எந்த நிலையிலும், எத்தகைய போட்டியிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும்.

    அடுத்த மாதத்தில் தோகா டைமண்ட் லீக் மற்றும் ஜூன் மாதத்தில் பாவோ நூர்மி விளையாட்டில் பங்கேற்க உள்ளேன். ஒலிம்பிக்குக்கு முன்பாக 3-4 போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்.

    ஜெர்மனி இளம் வீரர் குறித்து...

    ஜெர்மனியின் இளம் வீரர் மேக்ஸ் டெனிங் சமீபத்தில் 90.20 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தது குறித்து கேட்கிறீர்கள். மேக்ஸ் டெனிங்குடன் இதற்கு முன்பு நான் விளையாடியதில்லை. பாவோ நூர்மி விளையாட்டில் அவரை எதிர்கொள்ள ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

    டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் உலக தடகளத்தில் என்னுடன் 90 மீட்டர் தூரத்திற்கு மேல் ஈட்டி எறிந்தவர்களும் களம் கண்டனர். அதில் அவர்களை தோற்கடித்தேன். அதனால் இது போன்று அதிக தூரம் ஈட்டி எறிந்தவர்களுடன் மோதுவது எனக்கு புதிதல்ல. அது ஒரு பெரிய விஷயமே இல்லை. குறிப்பிட்ட நாளில் நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதே முக்கியம்.

    சக நாட்டவரான கிஷோர் ஜெனா உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும், ஆசிய விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட்டார். அவரது முன்னேற்றத்தை பார்க்கும் போது, எனக்கு முன்பாக 90 மீட்டர் இலக்கை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ஊக்கத்தொகை அறிவிப்புக்கு வரவேற்பு

    பாரீஸ் ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு ஊக்கத்தொகை (ரூ.41½ லட்சம்) வழங்கப்படும் என்ற உலக தடகள சம்மேளனத்தின் அறிவிப்பு ஒரு சிறப்பான தொடக்கமாகும் இதேபோல் டைமண்ட் லீக் போன்ற மற்ற பெரிய போட்டிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கினால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறினார்.

    • இந்திய அணியின் தலைமை பொறுப்பில் இருந்து 41 வயதான மேரி கோம் நேற்று விலகி இருக்கிறார்.
    • மேரி கோமின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்.

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் தலைவர் பொறுப்பை ஏற்று 6 முறை உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் செயல்படுவார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த மாதம் அறிவித்தது.

    இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பொறுப்பில் இருந்து 41 வயதான மேரி கோம் நேற்று விலகி இருக்கிறார். இது தொடர்பாக அவர் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், 'நாட்டுக்கான வேலை செய்வதை எல்லா வகையிலும் நான் பெருமையாக கருதுகிறேன். அதற்காக நான் மனதளவில் தயாராக இருந்தேன். இந்த கவுரவமிக்க பொறுப்பில் என்னால் இருக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது.

    தனிப்பட்ட காரணத்துக்காக இந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இந்த பொறுப்பில் இருந்து ஒதுங்குவது எனக்கு சங்கடமாக இருக்கிறது. ஆனால் இதனை தவிர எனக்கு வேறு வழியில்லை. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது நாட்டு வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்துவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேரி கோம் விலகலை உறுதிப்படுத்தி இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, 'தனிப்பட்ட காரணத்துக்காக இந்திய அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து மேரி கோம் விலகியது வருத்தம் அளிக்கிறது. மேரி கோமின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவருக்கு எப்போதும் நாங்கள் ஆதரவாக இருப்போம். அவருக்கு பதிலாக அந்த பொறுப்பில் யாரை நியமிக்கலாம் என்பது குறித்து கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிப்போம்' என்றார்.

    • பிவி சிந்து தரவரிசையில் 12-வது இடத்தை பிடித்து தகுதி பெற்றுள்ளார்.
    • பிரனோய் 9-வது இடத்தையும், லக்ஷயா சென் 13-வது இடத்தையும் பிடித்து தகுதி பெற்றுள்ளனர்.

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் ஏழு வீரர்- வீராங்கணைகள் தகுதி பெற்றுள்ளனர்.

    பி.சி. சிந்து, ஹெச்.எஸ். பிரனோய், லக்ஷயா சென் ஆகியோர் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டனர். இருந்தபோதிலும் இன்று முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச பேட்மிண்டன் சங்கத்தின் தரவரிசையில் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள், முதல் 16 இடங்களில் இருக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தகுதி பெறுவார்கள். முன்னாள் உலக சாம்பியனும் ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றவருமான பிவி சிந்து தரவரிசையில் 12-வது இடத்தை பிடித்து தகுதி பெற்றுள்ளார்.

    பிரனோய் 9-வது இடத்தையும், லக்ஷயா சென் 13-வது இடத்தையும் பிடித்து தகுதி பெற்றுள்ளனர்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஆகியோர் 3-வது இடத்தை பிடித்துள்ளனர். இவர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    பெண்கள் இரட்டையர் பிரிவில் தனிஷா கிராஸ்டோ- அஸ்வினி பொண்ணப்பா ஆகியோர் 13-வது இடம் பிடித்து தகுதி பெற்றுள்ளனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் மற்றொரு ஜோடியான திரீஷா ஜோலி- காயத்ரி கோபிசந்த் ஆகியோர் வாய்ப்பை தவறவிட்டனர்.

    • ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய அணி தகுதி பெற்று அசத்தியுள்ளது.
    • ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான மகளிர் அணியில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு இடம்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

    ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய அணி தகுதி பெற்று அசத்தியுள்ளது.

    இதற்காக, பஹாமாஸில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி தகுதி பெற்றுள்ளனர்.

    ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான மகளிர் அணியில் தமிழகத்தை சேர்ந்த சுபா வெங்கடேசனும் இடம் பெற்றுள்ளார்.

    • உலகத் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இருக்கும் வீரர் தனது ஜோடியை தேர்வு செய்ய முடியும்.
    • போபண்ணா முதல் 10 இடத்திற்குள் இருப்பதால் தனது ஜோடியை அவரால் தேர்ந்தெடுக்க முடியும்.

    இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா. ரோகன் போபண்ணா ஆண்கள் இரட்டையர் பிரிவில் உலகத் தலைவரிசையில் 4-வது இடத்தில் உள்ளார்.

    44-வது வயதான இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். உலகக்கோப்பை மற்றும் டென்னிஸ் விதிப்படி தரவரிசை 10-க்குள் இருக்கும் வீரர் தன்னுடன் விளையாடும் வீரரை தேர்வு செய்யலாம்.

    அதன்படி இந்திய டென்னிஸ் வீரர்களான என். ஸ்ரீராம் பாலாஜி அல்லது யூகி பாம்ரி ஆகியோரில் ஒருவரை போபண்ணா தனது ஜோடியாக தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது.

    இரண்டு பேர்களில் ஒருவரை தேர்வு செய்து அகில இந்திய டென்னிஸ் சங்கத்திடம் தெரிவிப்பார். அவர்கள் ஆலோசனை செய்து போபண்ணா பரிந்துரை செய்யும் நபரை தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது.

    தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் டென்னிஸ் தொடர்களில் இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

    பாலாஜி காக்லியாரி சேலஞ்சர் போட்டியில் ஜெர்மன் பார்ட்னருடன் இணைந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பாம்ரி முனிச்சில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் பார்ட்னருடன் இணைந்து பதக்கம் வென்றார். மற்றொரு போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.

    பாரிஸ் ஒலிம்பிக்கில் 32 ஜோடிகள் கலந்து கொள்ளும். ஒரு நாடு அதிகபட்சமாக இரண்டு ஜோடியை அனுப்ப முடியும்.

    பிரெஞ்ச் ஓபன் முடிவடைந்த பிறகு, ஜூன் 10-ந்தேதி தரவரிசை முடிவு செய்யப்படும். கடந்த 2012-ம் ஆண்டு ஜோடி சேர்ந்த விளையாடுவதில் சர்ச்சை ஏற்பட்டது. மகேஷ் பூபதி, போபண்ணா ஆகியோர் லியாண்டர் பயேஸ் உடன் இணைந்து விளையாட மறுத்துவிட்டனர். இதனால் விஷ்னு வர்தன் சேர்ந்து விளையாடினார்.

    2018-ல் நடைபெற்ற ஆசிய போட்டியில் சரியான ஜோடியை தரவில்லை என லியாண்டர் பயேஸ், ஆசிய போட்டியில் இருந்து வெளியேறினார். 

    • நிஷாந்த் தேவ் 71 கிலோ எடைப்பிரிவு போட்டியில் மால்டோவா வீரரை 5-0 என வீழ்த்தினார்.
    • ஏற்கனவே மூன்று இந்திய வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக தகுதி பெறுவதற்கான தகுதிச் சுற்றுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே நடைபெற்ற தகுதிச் சுற்று ஒன்றில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை நிஷாந்த் தேவ் இழந்தார். இந்த நிலையில் இன்று மற்றொரு தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் நிஷாந்த் தேவ் 71 கிலோ எடைப்பிரிவு போட்டியில் மால்டோவா வீரரை 5-0 என வீழ்த்தி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இடம் பிடித்தார். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் ஆவார்.

    இந்தியாவைச் சேர்ந்த பெண் வீராங்கனைகளான நிகாத் ஜரீன் (50 கிலோ), ப்ரீத் பவார் (54 கிலோ), லோவ்லினா போர்கோஹெய்ன் (75) ஆகியோர் ஏற்கனவே பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்னர்.

    அருந்ததி சவுத்ரி (66 கிலோ), அமித் பங்கல் (51) ஆகியோர் தகுதிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    • இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷாவுடன் சந்திப்பு.
    • பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் தயார் நிலை குறித்து விளக்கினர்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது.

    இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் பங்குபெறுவார்கள். இந்தியா சார்பில் ஏற்கனவே 97 வீரர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், மேலும்,120 தடகள வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என புதிதா பதவியேற்ற மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

    மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷாவுடனான சந்திப்பின் போது, இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான நாட்டின் தயார் நிலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்த சந்திப்பில், விளையாட்டுத்துறையின் புதிய இணை அமைச்சர் ரக்ஷா காட்சே, விளையாட்டுத்துறை செயலாளர் சுஜாதா சதுர்வேதி, இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் சந்தீப் பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர் அமைச்சர் மாண்டவியா கூறுகையில், " நான் இன்று முதல் முறையாக ஐஓஏ அதிகாரிகளை சந்தித்தேன். அங்கு அவர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் தயார் நிலை குறித்து என்னிடம் விளக்கினர்.

    சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க ஏற்கனவே 97 விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். மேலும் 115 முதல் 120 தடகள வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.

    • 2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்.
    • 2014 ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.

    துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் முன்னணி வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இவர் 2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். 2014 ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். தற்போது 21 பேர் கொண்ட துப்பாக்கிச்சுடுதல் குழுவுடன் பாரிஸ் செல்ல இருக்கிறார்.

    ஒலிம்பிக்கில் விளையாடி நாட்டிற்கு தங்கம் வெல்ல வேண்டும் என்பது என்னுடைய தந்தையின் கனவு. தற்போது தந்தைக்காக நான் தங்கம் வென்று அவரது கனவை நிறைவேற்ற முயற்சி செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

    பெண்கள் மற்றும் ஆண்கள் என இரண்டு பிரிவுகளில் கலந்து கொள்ளும் முதல் நபர் நான். பீகாரில் இருந்து துப்பாக்கிச்சுடுதல் அணியில் ஒலிம்பிக் போட்டியில் கலந்த கொள்ள தகுதி பெற்றுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஒலிம்பிக் போட்டியில் நாட்டிற்காக கலந்து கொள்வதை மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறேன். இன்று காலை 11 மணிக்கு தேசிய ரைபிள் சங்கத்திடம் இருந்து தகுதி பெற்ற செய்தியை பெற்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    இவர் பீகார் மாநிலம் ஜமுய் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் முன்னாள் மத்திய மந்திரி திக்விஜய் சிங்கின் மகள் ஆவார். இவருக்கு 32 வயதாகிறது.

    ×