Magizha Malaiya? Marma Malaiya?
()
About this ebook
Read more from Lakshmi Rajarathnam
Nesam Marakavillai Nenjam! Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsEn Anni - En Manaivi? Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Navagrahangal Rating: 1 out of 5 stars1/5Thiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsNinaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsMannil Vizhuntha Mazhaithuligal Rating: 0 out of 5 stars0 ratingsKaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Swarangalukkul… Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsMazhaikooda Thenagalam Rating: 0 out of 5 stars0 ratingsMarakkuma Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsEnakkul Nee! Rating: 5 out of 5 stars5/5Naan Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsAbiyum Azhaganum Rating: 2 out of 5 stars2/5Poomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Minnal Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Amudham Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhali… Ennai Kaadhali… Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsThanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5Yaarukku Mappillai Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Rajarathnam Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Amudham Part - 2 Rating: 5 out of 5 stars5/5Uravu Sonnavan Rating: 0 out of 5 stars0 ratings
Related to Magizha Malaiya? Marma Malaiya?
Related ebooks
Santhana Mullai Rating: 0 out of 5 stars0 ratingsThanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5Bramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsAnbe Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Undhan Poomalai Rating: 5 out of 5 stars5/5Anbe, Kannaley Kollathey! Rating: 0 out of 5 stars0 ratingsSolai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Unarvugalin Holi Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikku Vantha Malarae Rating: 0 out of 5 stars0 ratingsIppadiyum Manithargal...! Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsEn Veedu Rating: 0 out of 5 stars0 ratingsIrukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Anuradha Ramananin Sirukathaigal Collection - 4 Rating: 3 out of 5 stars3/5Uravukkendru Virintha Ullam Rating: 1 out of 5 stars1/5Iniya Unarvey Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Dinam Dinam Valarpirai Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Konangal Rating: 4 out of 5 stars4/5Paathaiyora Paathigal Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thazhuvatha Mehangal! Rating: 0 out of 5 stars0 ratingsPaarkadal Rating: 5 out of 5 stars5/5Vaa.. Vaa.. Vasanthamey Rating: 0 out of 5 stars0 ratingsNe En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsMathana Moga Rooba Sundara!! Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsSuriyagrahanam Rating: 5 out of 5 stars5/5En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Magizha Malaiya? Marma Malaiya?
0 ratings0 reviews
Book preview
Magizha Malaiya? Marma Malaiya? - Lakshmi Rajarathnam
http://www.pustaka.co.in
மகிழ மலையா? மர்ம மலையா?
Magizha Malaiya? Marma Malaiya
Author:
லட்சுமி ராஜரத்னம்
Lakshmi Rajarathnam
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
1
மஞ்சு வீட்டிற்குள் வந்தாள். மணி எட்டு. அக்கா மந்தாகினி கதவைத் திறந்தாள். தங்கை மஞ்சு நேரம் கழித்து ஏன் வருகிறாள் என்பது தெரிந்த விஷயம் தான். அக்காளும், தங்கையுமாய் நடத்தும் குடித்தனத்தில் ஒருத்தர்க்கு ஒருத்தர் தெரியாத இரகசியம் ஏதுமில்லை. வீட்டிற்குள் நுழைந்ததுமே ஒருவரிடம் மற்றவர் பகிர்ந்துக் கொள்வது வழக்கமான விஷயமே.
இதனால் இருவரின் மனங்களிலும் எந்தவிதமான அடைசல்களும் கிடையாது. துடைத்து விட்ட சிலேட்டாக இருந்தது. தனியாகக் குடும்பம் நடத்தும் பெண்களிடம் பயம் ஏதும் இருக்க வழியில்லை. மந்தாகினி பெரியவள் என்பதால் சின்னவள் மஞ்சு மரியாதை கொடுத்தும், புத்திமதி கேட்டும் நடந்துக் கொள்வாள்.
சமூக சேவை நிலையம் ஒன்றில் வேலை பார்க்கும் மந்தாகினிதான் குடும்பத்தை வழி நடத்தி வந்தாள். அங்கு அதிகமான வருமானம் வர வாய்ப்பு இல்லை. மன நிம்மதியைப் பெற வாய்ப்பு இருந்தது. உதவி கேட்டு வரும் பெரிய குடும்பத்தினர்க்கு இவர்கள் நிலையம் உதவி செய்ய உறுப்பினர்களை அனுப்பி வைப்பார்கள்.
பெரிய குடும்பத்தினர் கண்டிப்பாக ஒரு கட்டணத்தைத் தருவார்கள். சேவை நிலையம் அதை வருமானமாகக் கொண்டு இவர்களுக்கு சம்பளம் தருவார்கள். சில பணக்கார குடும்பங்கள் தங்களின் ஆடம்பரமான கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இவர்கள் நிலையத்தை அணுகுவார்கள். அச்சமயங்களில் ஏழெட்டு பேர்களாகப் போவார்கள்.
நிகழ்ச்சி முடிந்து இவர்களது சேவைகளை பாராட்டி புடவையுடன் பணம், பலகாரங்கள் வைத்து அன்பளிப்பாக ஈவார்கள். மந்தாகினி பலகாரம் சாப்பிடுவாளே தவிர புடவைகள், பணத்தைத் தனக்காக ஒரு போதும் வைத்துக் கொண்டதில்லை.
சேவை நிலையத்தில் தன்னை விட வறுமையில் வாடும் பெண்கள் குடும்பத்திற்குப் பண்டிகை தினங்களில் பரிசாகக் கொடுத்து விடுவாள்.
சேவை நிலையத்தின் நிர்வாகி அன்னம்மா அவளிடம் இப்படி வாரி வழங்குவதற்கு நீ ஒன்றும் பணக்காரி இல்லையே மந்தா. ஏன் இப்படி இருக்கிறாய்? இப்படி வர்ற பணத்தை வைத்துக் கொண்டு எத்தனையோ பையன்களுக்கும், பெண்களுக்கும் பீஸ் கட்டுகிறாய்? உன் பிற்காலத்திற்கு என்று ஏதாவது சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாதா?
என்று பலமுறை சொல்லி இருக்கிறாள்.
மந்தாவின் முகத்தில் சிரிப்பு வாடாது.
இன்றைக்கு நாம் ஒருவருக்குச் செய்தால் நாளை நமக்கு யாராவது செய்வார்கள் அம்மா. இது இறைவன் நமக்கு வரையறுத்துள்ள இலக்கணம். மேலும் என் தங்கை மஞ்சு நிலையான பணியில் இருக்கிறாள். கவலை கொள்வதற்கு என்று எந்த விஷயமும் இல்லை. நாளை எப்படிப் போகும் என்று கவலைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் அம்மா
என்று பதில் சொல்லுவதில் அவளுக்குத் திருப்தி ஏற்படும்.
மந்தாகினி வேகமானவள். நதியைப் போன்றவள். உடல்நலம் சரியில்லாதவர்களுக்குத் சேவையா, கல்யாண வீட்டிற்குப் போகலாமா? என்றால் உடல்நலம் இல்லாதவர்களைத் தான் தேர்ந்தெடுப்பாள். யாருக்கும் அஞ்சாத ஒருநடையுடன் அவள் உடலில் ஆண்மையின் செருக்கும் அமைந்திருப்பது இறைவன் கொடுத்த வரப் பிரசாதம்.
இதனாலேயே நிலைய நிர்வாகி அன்னம்மாவிற்கு இவள் இன்றியமையாதவளாக இருந்தாள். நிதி நிர்வாகத்தை கவனிக்க அன்னம்மா வெளியே போக நேரும் பொழுது இவள்தான் சேவை நிலையத்தை கவனித்துக் கொள்வாள். சேவை நிலையத்தில் அன்னம்மாவும் இன்னும் சில வேலையாட்களும் தான் தங்கி இருப்பவர்கள். நிறையப் பேர்கள் மந்தாகினி மாதிரி வீட்டிலிருந்து வருபவர்கள்.
மந்தாகினியின் துணிவுக்கும், கண்டிப்பான பேச்சுக்கும் எதிர்குணம் கொண்டவள் இளையவள் மஞ்சு. நளினமான பெண். கண்களில் ஒருவித நாணம் ஒட்டிக் கொண்டே இருக்கும். படிக்கும் காலத்திலேயே அவள் பார்வையில் விழுந்தவர்கள் பலர். ஆனால் அவள் விழவில்லை என்பது தான் ஆச்சர்யம்.
அக்காவின் கண்டிப்பு அவளை வளையமாகச் சுற்றி வளைத்திருந்தது எந்த ஆடவனைப் பற்றியும் பேசுவதை அக்கா விரும்புவதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவள். தங்கையையும் தன் வழியிலேயே நடத்தி வந்தாள். என்றாலும் இயற்கை ஒரு நாணத்தையும் அழகையும் கொடுத்து விட்டனவே.
அப்பா வழியில் கொஞ்சம் நிலங்கள் கிராமத்தில இருந்தன. அப்பாவுக்கு அதிக படிப்பு இல்லை. அதனால் ஒரு வக்கீலிடம் தன் திறமையைக் காட்டி குமாஸ்தாவாக இருந்தார். பெரிய வக்கீல் என்பதால் குமாஸ்தா குமாரலிங்கத்திற்கும் வருமானம் தாராளமாக வந்தது. நில வருமானத்தை வைத்து வீடு ஒன்றையும் வாங்கிவிட்டிருந்தார்.
மனைவி கண்ணம்மாவும் வாழ்க்கையை உணர்ந்தவள். இரண்டும் பெண் குழந்தைகள் எட்டும் மூன்றுமாக. ரெண்டும் பொட்டைப் புள்ளைக என்ற கவலை கண்ணம்மாவை தாரளமாக செலவு பண்ண விடவில்லை. உடுத்தியும், பூட்டியும் அழகு பார்க்க வேண்டியவள் அடக்கியே வாசித்தாள். குமாரலிங்கம் பெரிய வக்கீலிடம் இருந்ததால் வரும் கட்சிக்காரர்களும் பெரிய இடம் தான்.
விடைபெற்றுச் செல்லும் சமயம் தாராளமாகவே கையில் வைத்து அழுத்திவிட்டுச் செல்வார்கள்.
ஏன் கண்ணா, புள்ளங்களுக்கு தாராளமாகவே செலவு பண்றது?
என்பார்.
புள்ளங்கள கஷ்டம் தெரிஞ்சு வளர்க்கணும், தாராளமா வளர்த்துட்டா நாமதாங்க கஷ்டப்படணும்
என்பாள்.
நாமதான் கஷ்டப்படணும்னு எந்தவேளையில் சொன்னாளோ தெரியவில்லை. நிலங்களைப் பார்க்கச் சென்ற குமாரலிங்கம் பாம்பு கடித்துப் பிணமாக வந்து சேர்ந்தான்.
கணவன் பிணமாக வந்ததைக் கண்ட கண்ணம்மா கதறினாள். புரண்டாள். புள்ளைகளைக் கட்டிக் கொண்டு அலறினாள். ஆண்டாண்டுதோறும் அழுதாலும் மாண்டார் வருவதில்லையே. எட்டுவயசு மந்தாகினி அம்மாவுக்கு தாயாக மாறினாள்.
அம்மா, கஞ்சியைக் குடி
என்று அம்மாவைத் தேற்றியதுடன் தங்கை மஞ்சுவையும் பார்த்துக் கொண்டாள்.
துக்கம் கேட்டு விட்டுப் போன ஆசிரியையும் திரும்ப வீட்டிற்குள் வந்து பேசலானாள்.
அம்மா, புள்ளய எத்தனி நாள்தான் பள்ளிக்கு அனுப்பாம வச்சிருக்கப் போறீங்க. இருக்கறவங்க வாழ வேண்டாமா! புள்ளங்க எதிர்காலத்தைப் பத்தி நெனைக்க வேணாமா!
எட்டு வயசு மந்தாகினியின் மனதில் ஆசிரியையின் பேச்சு இறங்கியது. அவளும் தனியாக அப்பாவை எண்ணி எண்ணி அழுகிறவள்தான். அதை எண்ணுவதிலோ, அழுவதிலோ எந்தப் பயனும் இல்லை என்பதை அச்சிறுமி புரிந்துக் கொண்டது இறைவன் கொடுத்த வரம்.
மஞ்சுவைத் தூக்கி அம்மா மடியில் உட்கார வைத்தாள். அம்மா, சமையலை கவனி. நான் பள்ளிக்கூடம் போய்ட்டு வரேன்.
என்று சொல்லிவிட்டுப் போனாள்.
நடுப்பகல் வந்தவள் மஞ்சுவையும் ஸ்கூலுக்குத் தூக்கிக் கொண்டு போனாள்.
எதுக்கும்மா புள்ளய ஸ்கூல்க்கு தூக்கிட்டுப் போறே?
இத எல்.கே.ஜியில போடப் போறேன்.
பெரிய மனுஷி போலப் பேசும் அவளைப் பார்த்து அதிசயித்தாலும் மகள் சாமான்யப்பட்டவள் இல்லை என்று புரிந்துக் கொண்டாள்.
வக்கீல் வந்தார். மந்தாகினியும் வீட்டில் இருந்தாள். மஞ்சுவுக்கு எழுதப் பழகிக் கொண்டிருந்த சிறுமியைப் பார்த்தார்.
நீதான் குமாரலிங்கத்தோட மூத்த பெண்ணா!
ஆமாங்கய்யா
படிக்கிறியா!
படிப்புத்தான் ஸார் இந்தக் காலத்துப் பெண்களுக்குத் துணை. என் தங்கையையும் பள்ளிக்கூடத்துல சேர்த்துட்டேன்.
குட்... சின்னப் பெண்ணானாலும் அறிவாளியா இருக்கேம்மா...
அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டாள்.
அவர் சட்டென்று பணக்கட்டை எடுத்துக் அவள் கையில் கொடுத்தார்.
இது எதுக்கு ஸார்
இதுல ஒரு லட்சம் இருக்குதும்மா... உங்கப்பா எங்கிட்ட வேலை பார்த்தார் இல்லையா அவருக்கு சேர வேண்டிய பணம்மா
அப்படி என்றால் சரி. இத்தனை பணத்தை எங்கே எப்படி வச்சுக்கறதுனு தெரியல்ல ஸார்.
அம்மாவுக்குத் தெரியும் மந்தா.
மந்தாகினியின் இதழ்களில் ஒரு விரக்திப் புன்னகை ஓடியது. எல்லாத்தையும் அப்பாதான் பார்த்துக்குவாரு. ஊர்ல கொஞ்சம் நிலங்கள் இருக்குது. அதையும் வித்து இதோட போட்டு மாசாமாசம் செலவுக்கு வர மாதிரி ஏதாவது ஏற்பாடு இருக்குது. அதையும் வித்து இதோட போட்டு மாசாமாசம் செலவுக்கு வரமாதிரி ஏதாவது ஏற்பாடு இருக்குதா சார். அப்பா இருந்தால் பணம் மாசாமாசம் வரும்
என்ற பொழுது எவ்வளவு தடுத்தும் குரல் தழுதழுத்தது.
வக்கீல் அவளை அணைத்துக் கொண்டார். ரொம்ப புத்திசாலிம்மா நீ
என்றார்.
சொன்னதுடன் நில்லாமல் இரண்டே மாதங்களில் நிலங்களை விற்று பணத்தை வங்கியில் முதலீடு பண்ணினார். கணிசமான வட்டி வந்தது. கவலையில்லாத ஒரு வாழ்க்கை கண்ணம்மா வாழத் தொடங்கினாள். தந்தைக்கே உபதேசம் செய்த முருகனாகக் கண்ணம்மா மூத்த மகளை எண்ணினாள்.
அம்மா, எதுக்கு ரசம், குழம்புனு ரெண்டும்? ஒண்ணு வச்சு ஒரு கூட்டோ, பொரியலோ செய்
என்பாள் மந்தாகினி.
துணி இருக்குது. தீபாவளிக்கு வாங்கினா போதும். பக்கத்து வீட்ல வாங்கறாங்கனு நீ வாங்காதே
என்று அம்மாவை அதட்டுவாள்.
வீட்டைச் சுற்றி இருக்கும் கொஞ்சம் மண் தரையில் புடலை, அவரை, பாகல் என்ற கொடிகளையும், வெண்டை, கத்திரியையும் விளைய விட்டாள்.
உன் பெண்ணை அரசியல்ல விட்டால் அவ இந்தியாவையே கடன் வாங்காம செய்திடுவா
என்று அக்கம் பக்கத்தினர் சொல்லும் பொழுது மகிழ்ந்து போவாள் கண்ணம்மா.
மாசக்கடைசியில் வரவு செலவு பார்ப்பாள். வீட்டில் வாங்கிய முதல் மாசம் மிஞ்சிய சாமான்களை மறுமாசம் வாங்காமல் பட்ஜெட்டை குறைப்பாள்.
மாசத்தில் முதலில் சாமான்கள் வாங்கிவிட்டால் எக்காரணம் கொண்டும் சாமான்கள் வாங்கப் பையைத் தூக்கிக் கொண்டு கடைக்குப் போகக் கூடாது. மஞ்சு பாப்பாவுக்கு பிஸ்கட் வாங்க மட்டுமே கடைக்குப் போக வேண்டும்.
அன்றிலிருந்து இன்று வரை அதையே கடைபிடித்தும் வந்தாள் மந்தாகினி.
***
2
வீட்டிற்கு நேரம் கழித்து வந்த மஞ்சு குளித்து உடை மாற்றிக் கொண்டாள். எந்நேரம் வந்தாலும் குளித்து விட்டு உணவு உண்ணும் பழக்கமே இருவரிடமே உண்டு.
அக்கா சாப்பிடலாமா?
சாமி கும்பிட்டியா?
இதோ கும்பிட்டு இருக்கேன்
என்ற மஞ்சு விளக்கேற்றி தொழுதாள்.
அந்த வீட்டின் இஷ்ட தெய்வம் முருகன். கண்ணம்மாவிற்கு முருகன்தான் தெய்வம்.
கைவிட்டால் நாயேனைக் காப்பார் ஒருவரும் இல்லை. பொய் விட்டார் போற்றும் புனிதனே
என்று திருப்போரூர் சன்னதி மாலையை கண்ணம்மா சொல்லிச் சொல்லி மந்தானிக்கும் பாடமாகி விட்டது.
மஞ்சுவும், முணுமுணுத்தபடி முருகனைத் தொழுதாள். அவள் கண்கள் அடுத்த படத்தில் போய் தேங்கியது. அது ஒரு பெரியவரின் படம். அவர்கள் பிறப்பதற்கு முன்பே அந்த வீட்டில் இருந்த.
இவர் யாரம்மா?
"தெரியல்லம்மா... பக்கத்து வீட்ல ஒரு தாத்தா குடி இருந்தாரு. அவர் மகன் கூடப் போகும் பொழுது எனக்குக் கொடுத்துட்டுப் போனாரு என்னமோ அவரைக் கொஞ்ச நேரம் பார்த்தாலே போதும். நெஞ்சுல